மாநாட்டில் பவுன்சர்கள் தாக்கியதாக புகார்.., தவெக தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்னும் கட்சியை தொடங்கி அரசியல் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விஜய் மீது வழக்குப்பதிவு
அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் நெருங்கி வரும் சூழ்நிலையில் பிற கட்சிகளை போலவே விஜயும் தனது கட்சியை வலுப்படுத்துகிறார்.
இதற்காக சில தினங்களுக்கு முன்பாக தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடை மதுரையில் பிரம்மாண்டமாக நடத்தி முடித்தார். அங்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் திரண்டனர்.

வரி விதிப்புக்கு மத்தியில்.., இந்தியாவும் அமெரிக்காவும் 1 பில்லியன் டொலர் மதிப்புள்ள Tejas jet engine ஒப்பந்தம்
அப்போது பெரம்பலூர் மாவட்டம், பெரியம்மாபாளையத்தை சேர்ந்த சரத்குமார் என்பவர் தமிழக வெற்றி கழக தலைவர் விஜயின் ரேம்ப் வாக்கை பார்ப்பதற்காக சென்றுள்ளார்.
இந்த மாநாட்டில் தன்னை பவுன்சர்கள் தூக்கி வீசியதாக பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார் சரத் குமார்.
அதன்படி, 189(2), 296(B), 115(1) ஆகிய பிரிவுகளின் கீழ் விஜய் மற்றும் பவுன்சர்கள் மீது குன்னம் பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |