நகரம் முழுக்க சவப்பெட்டிகள்... அச்சம் விலகாமல் மக்கள்: வெளிவரும் பின்னணி
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் ஒரு நகரம் முழுக்க சவப்பெட்டிகள் காணப்படுவதால் மக்கள் செய்வதறியாது திகைத்துப் போயுள்ளனர்.
ஐடா சூறாவளியால் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பலரது சவப்பெட்டிகள் விடுபட்டு கிட்டத்தட்ட நான்கு வாரங்களாக நகரம் முழுக்க காணப்படுகிறது. தற்போது மயானத்தில் இருந்து மாயமான சவப்பெட்டிகளை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
ஆகஸ்ட் மாத இறுதியில் ஏற்பட்ட ஐடா புயல் காரணமாகவே சவப்பெட்டிகள் மயானத்தில் இருந்து விடுபட்டுள்ளன. பலரும் தங்கள் உறவினர்களின் சவப்பெட்டிகளை தற்போது தேடி வருகின்றனர்.
தாயார், சகோதரி உள்ளிட்ட மூவரின் சவப்பெட்டிகளை தாம் இன்னமும் தேடி வருவதாக ஒருவர் தெரிவித்துள்ளார். மொத்தமாக 30 முதல் 50 சவப்பெட்டிகள் மயானத்தில் இருந்து பெருவெள்ளம் காரணமாக அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என உள்ளூர் பாதிரியார் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், உறவினர்களால் மீட்கப்படும் சவப்பெட்டிகளை மறுபடியும் புதைக்க 8,000 டொலர் வரையில் நிதியுதவியும் அளிக்கப்பட்டு வருகிறது.