முதலாளி வீட்டிற்குள் நுழைய முயன்ற விஷ நாகம்! தடுத்து நிறுத்தி காவல் காத்த பூனை... சிலிர்க்க வைக்கும் வீடியோ காட்சி
இந்தியாவில் முதலாளியின் வீட்டிற்குள் நுழைய முயன்ற 4 அடி நீள விஷப்பாம்பை பூனை ஒன்று தடுத்து நிறுத்தி, பாம்பு வீடிற்குள் நுழையாத வண்ணம் காவலுக்கு இருக்கும் வீடியோ காட்சி வைரலாகியுள்ளது.
ஒடிசாவை சேர்ந்த சம்பத் குமார் பரிதா என்பவரின் வீட்டில் வளரும் பூனை சின்னு, எதையோ கண்டு மிரண்டது போல் இருந்துள்ளது.
மேலும் வேகமெடுத்து வீட்டின் பின்புறத்திற்கு ஓடிய பூனை தன் உரிமையாளரின் வீட்டினுள் நுழைய முயன்ற 4 அடி நீள நல்ல பாம்பை தடுத்து நிறுத்தியது.
பாம்பாட்டிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர் வரும் வரை நின்ற இடத்தை விட்டு பாம்பு நகராமல் சின்னு பார்த்து கொண்டது.
30 நிமிடங்கள் கழித்து பாம்பாட்டி வந்து பாம்பை பிடித்து பையில் அடைக்கும் வரை பூனை காவலுக்கு நின்றது.
பூனையின் செயல் காண்போரை நெகிழ்ச்சி அடையச் செய்த நிலையில் இது தொடர்பான சிலிர்க்க வைக்கும் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.