மூக்கடைப்பு அல்லது தடிமன் அறிகுறியும் கொரோனா தான்: பிரித்தானிய நிபுணர் எச்சரிக்கை
மூக்கடைப்பு அல்லது தடிமன் அறிகுறிகளைக் கொண்ட மூன்றில் ஒருவருக்கு உண்மையில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
கொரோனா தரவுகள் தொடர்பில் ஆய்வுகளை முன்னெடுத்துவரும் பிரித்தானிய பேராசிரியர் Tim Spector இது தொடர்பில் எச்சரித்துள்ளார்.
மேலும், முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட பெரியவர்களுக்கு லேசான தடிமன் அறிகுறிகள் காணப்படுவதும் கொரோன தொற்று தான் என அவர் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, பலருக்கும் கொரோனா தொற்றியுள்ளதாகவும், ஆனால் சாதாரண தடிமன் என கருதியே அவர்கள் அதை கண்டுகொள்ளாமல் பெருவிருந்துகளில் பங்கேற்று அதிகம் பரப்புவதாகவும் எச்சரித்துள்ளார்.
மூக்கு ஒழுகுதல் அல்லது தொண்டை வலி போன்ற அறிகுறிகள் உள்ள எவரும், அனைத்து கிறிஸ்துமஸ் விருந்துகளையும் தவிர்த்து தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் உரிய பரிசோதனை மேற்கொள்ளவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
தற்போது சதாராண தடிமனால் பாதிக்கப்பட்டுள்ள மூன்றில் ஒருவர் அல்லது நான்கில் ஒருவருக்கு கொரோனா பாதித்துள்ளது என்பதே உண்மை என பேராசிரியர் Tim Spector தெரிவித்துள்ளார்.
மேலும், தடிமன் அறிகுறி கொண்டவர்கள் குறைந்தது சில நாட்களேனும் தங்களை கட்டாயம் தனிமைப்படுத்திக்கொள்வது கொரோனா மேலும் பரவாமல் தடுக்க உதவும் என்றார்.
இன்னும் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பிரித்தானியாவில் உரிய சோதனைகளுக்கு தங்களை உட்படுத்தாமல் உள்ளனர். ஓமிக்ரான் பாதிப்பில் இருந்து நாம் விடுபட வேண்டும் எனில், கட்டாயம் சில நாட்கள் நம்மை தனிமைப்படுத்திக்கொள்ள நாம் தயாராக வேண்டும் என தெரிவித்துள்ளார் Tim Spector.
நீங்கள் தொற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படும் நிலையில் இருப்பவர் என்றால், உங்களால் அதிகம் பேர்கள் பாதிப்புக்கு உள்ளாகும் நிலையும் உள்ளது என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தற்போதை சூழலில், சாதாரண தடிமன் கூட கொரோனா அறிகுறியாக கருதப்படுகிறது. இதனால் நாம் எச்சரிக்கையாக இருப்பது சமூக பரவலில் இருந்து பிரித்தானிய மக்களை காக்க உதவும் என தெரிவித்துள்ளார் பேராசிரியர் Tim Spector.