நாடு முழுவதும் 8.5 லட்சம் போலி வங்கிக்கணக்குகள்! கண்டுபிடித்த சி.பி.ஐ
இந்தியாவில் 700 வங்கிக் கிளைகளில், 8.5 லட்சம் போலி வங்கிக்கணக்குகளை சி.பி.ஐ கண்டுபிடித்துள்ளது.
8.5 லட்சம் போலி வங்கிக்கணக்குகள்
சைபர் குற்றவாளிகள் நாடு முழுவதும் பல்வேறு வங்கிகளின் 700 கிளைகளில், 8.5 லட்சம் போலி வங்கிக்கணக்குகள் தொடங்கி பயன்படுத்தியதை சி.பி.ஐ அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ராஜஸ்தான், டெல்லி, அரியானா, உத்தரகாண்ட், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் 42 இடங்களில் சி.பி.ஐ சமீபத்தில் சோதனை நடத்தியது.
சைபர் குற்றவாளிகளால் தொடங்கப்பட்ட கணக்குகள் KYC விதிமுறைகளை பின்பற்றாமலும், போலி ஆவணங்களை பயன்படுத்தியதாகவும் தெரிய வந்துள்ளது.
மேலும், அந்த கணக்குகள் சம்பந்தப்பட்ட நபருக்கு தெரிந்தோ அல்லது தெரியாமலோ தொடங்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சி.பி.ஐ விசாரணையில் சில வங்கி அதிகாரிகள், இ-மித்ரா முகவர்கள் மற்றும் இடைத்தரகர்கள் அந்த சைபர் குற்றாவளிகளுக்கு உடந்தையாக செயல்பட்டதும் தெரிய வந்துள்ளது.
சி.பி.ஐ விசாரணை
இந்த நிலையில் இடைத்தரகர்கள், முகவர்கள், வங்கிக்கணக்குதாரர்கள், வங்கி ஊழியர்கள் என 9 பேர் சி.பி.ஐயின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டனர்.
மேலும், முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் ஆதாரங்கள், செல்போன்கள், வங்கிக்கணக்கு தொடக்க ஆவணங்கள், பணப்பரிமாற்ற விவரங்கள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டன.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த சி.பி.ஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |