இனி 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2 முறை பொதுத்தேர்வுகள் நடத்தப்படும்- வெளியான அறிவிப்பு
2026ஆம் ஆண்டு முதல் 10ஆம் வகுப்பிற்கு ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
வெளியான அறிவிப்பு
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10ஆம் வகுப்புக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு நடத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அறிவித்துள்ளார்.
முதல் கட்ட பொதுத்தேர்வை மாணவர்கள் கட்டாயம் எழுத வேண்டும், 2ஆம் கட்ட பொதுத்தேர்வை மாணவர்கள் விருப்பம் இருந்தால் எழுதலாம்.
CBSE approves Class 10 board exams twice a year from 2026, confirms Exam Controller Sanyam Bhardwaj. First phase mandatory, second phase optional — best score to be retained: CBSE pic.twitter.com/RMZQDa8Mxf
— ANI (@ANI) June 25, 2025
அறிவியல் உள்ளிட்ட பாடங்களுக்கான உள்மதிப்பீடு தேர்வு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்தப்படும்.
2 முறை தேர்வு எழுதியவர்களில் அவர்கள் எந்த தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தார்களோ அதுவே இறுதி மதிப்பெண்ணாக கருதப்படும்.
முதற்கட்ட தேர்வில் மதிப்பெண் போதவில்லை என்றால், இரண்டாம் கட்ட தேர்வை எழுதலாம் என சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |