பிரித்தானியா எம்.பி கொல்லப்படுவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பு சந்தேக நபர் எங்கிருந்தார்? வெளியான சிசிடிவி காட்சி
பிரித்தானியா எம்.பி சர் டேவிட் அமேஸ் கொல்லப்படுவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பு சந்தேக நபர் லண்டனில் ரயில் நிலையத்திற்கு நடந்து சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
எம்.பி சர் டேவிட் அமேஸ் கொலை விசாரணையின் ஒரு பகுதியாக, சந்தேக நபருக்கு எதிரான ஒரு முக்கிய ஆதரமாக பொலிசாருக்கு இந்த சிசிடிவி காட்சி கிடைத்துள்ளது.
குறித்த வீடியோவை சந்தேக நபரின் வீட்டிற்கு அருகே உள்ள கடையிலிருந்து பெற்றதாக பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை பிரித்தானியா எம்.பி. சர் டேவிட் அமெஸ், தேவாலயத்தில் நடத்த தொகுதி மக்களுடனான கூட்டத்தின் போது கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தாக்குதல்தாரி அலி அர்பி அலியை கைது செய்து காவலில் எடுத்த பொலிசார், அவருக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புள்ளதாக என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை வடக்கு லண்டனில் உள்ள தனது வீட்டிலிருந்து புறப்பட்ட அலி, காலை 8.44 மணிக்கு, அதாவது எம்.பி கொல்லப்படுவதற்கு 3 மணிநேரத்திற்கு முன் ஒரு பையை மாட்டிக்கொண்டு Gospel Oak ரயில் நிலையத்தை நோக்கி செல்லும் சிசிடிவி காட்சி பொலிசாருக்கு கிடைத்துள்ளது.
எம்.பி சர் டேவிட் அமெஸ் சந்திக்க ஒரு வாரத்திற்கு முன்பே முன்னேற்பாடு செய்த அலி, வடக்கு லண்டனில் உள்ள Gospel Oak ரயில் நிலையத்திலிருந்து கிழக்கு லண்டனுக்கு பயணித்துள்ளார்.
அங்கிருந்து ரயில் மாறி Essex-க்கு சென்றுள்ளார். சுமார் 90 நிமிடங்கள் பயணித்து காலை 10:30 மணிக்கு, அதாவது எம்.பி-யை கொல்வதற்கு ஒன்றரை மணிநேரத்திற்கு முன்னரே அவர் Essex வந்ததாக கூறப்படுகிறது.
அலிக்கு எதிரான தகுந்த ஆதாரம் பொலிசாருக்கு கிடைத்துள்ள நிலையில், ஏதற்காக அவர் எம்.பி சர் டேவிட் அமேஸை கொன்றார் என்பதை கண்டறிய பொலிசார் அலியிடம் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.