இரவு நேரத்தில் தாய்-மகளுக்கு நேர்ந்த கதி! சிசிடிவியில் பதிவாகியிருந்த காட்சி: கதறி துடித்த பரிதாபம்
இந்தியாவில், தாய் மற்றும் மகளை அடையாளம் தெரியாத கும்பல் கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ காட்சி வெளியாகி பார்ப்போரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
டெல்லியின் ஷாலிமார் பாக் பகுதியில் உள்ள தங்கள் குடியிருப்பிற்கு இரவு உள்ளூர் நேரப்படி சரியாக 10 மணிக்கு காரில் தாய் ஒருவர் தன்னுடைய மகளுடன் வந்துள்ளார்.
அப்போது கார்பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு அந்த பெண்ணின் மகள் வெளியேறிய போது, அங்கு திடீரென்று வந்த பெண்கள் அவர் மகளை தாக்க ஆரம்பித்தனர்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனே காரை விட்டு வெளியே வந்து தடுக்க முயன்ற போது, திடீரென்று அங்கிருந்த சில ஆண்கள் கையில் வைத்திருந்த இரும்பு கம்பி மற்றும் உருட்டுக் கட்டையால் அவரை கண்மூடித்தனமாக தாக்கினர்.
இதில் அவர் ஒரு கட்டத்தில் நிலைகுலைந்து கதறி துடிக்கவே, உடனே அந்த கும்பல் அங்கிருந்து ஓடிவிட்டது. இது தொடர்பான வீடியோ காட்சி அங்கிருக்கும் சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது.
#WATCH | A group of persons beat up a woman with sticks in a residential colony in Shalimar Bagh area of Delhi on November 19
— ANI (@ANI) December 1, 2021
Based on the woman's complaint, Delhi Police has registered an FIR against unknown persons, it said.
(CCTV footage of the incident) pic.twitter.com/YmZRtD7COu
இது குறித்து தாக்குதலுக்குள்ளான அந்த பெண் அளித்துள்ள புகாரில், நானும் எனது மகளும், சம்பவம் நடந்த அன்றைய இரவு ஆம் ஆத்மி எம்.எல்.ஏ பந்தனா குமாரியின் ஆட்களால் அடித்து நொறுக்கப்பட்டோம்.
எம்.எல்.ஏ பந்தனா குமாரியின் கணவர் மீது 2019-ஆம் ஆண்டு நான் காவல்நிலையத்தில் புகார் அளித்ததால், அதை மனதில் வைத்துக் கொண்டு, இந்த தாக்குதலை நடத்தியிருக்கின்றனர்.
பெண் எம்.எல்.ஏவின் தவறான விஷயங்களை நான் அம்பலப்படுத்தி வருவதால் எனக்கு இது நேர்ந்துள்ளது. ஏற்கனவே எம்.எல்.ஏ மற்றும் அவரின் கணவர் மீது பல வழக்குகள் உள்ளதாக் அவர் குறிப்பிட்டுள்ளார்.