முன்பின் தெரியாதவர்களுடன் பழகி வேண்டுமென்றே கொரோனா தொற்றுக்கு ஆளான பிரபலம்: எதற்காக தெரியுமா?
அமெரிக்க பிரபலம் ஒருவர், வேண்டுமென்றே முன்பின்தெரியாதவர்களுடன் பழகி கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார்.
பிரபல வானொலி நிகழ்ச்சி ஒன்றை நடத்தும் அமெரிக்க பிரபலமான Dennis Prager (73), தடுப்பூசிகளுக்கெதிரான கருத்துக்கள் கொண்டவர்.
கடந்த ஆண்டு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டபோது, பொதுமுடக்கம் என்பது மனித வரலாற்றிலேயே மிக மோசமான தவறு என்று கூறியிருந்தார் Prager.
இந்நிலையில், தான் வேண்டுமென்றே முன்பின் தெரியாதவர்களுடன் பழகி கொரோனா தொற்றை விரும்பிப் பெற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ள Prager, தனக்கு இயற்கை நோய் எதிர்ப்பு சக்தி வரவேண்டும் என்பதற்காகவே அப்படி செய்ததாகத் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசிகளால் ஏற்படும் நோய் எதிர்ப்பு சக்தியைவிட இயற்கையாகவே ஏற்படும் நோய் எதிர்ப்பு சக்தியே சிறந்தது என்று கூறியுள்ள Prager, தான் அதற்காகவே காத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
Dennis Prager announces he has COVID-19 while ranting against vaccines and declaring that he was trying to get infected
— Jason Campbell (@JasonSCampbell) October 18, 2021
https://t.co/z12VuK3Wrw pic.twitter.com/0OP0Ge2aYi
கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் வீட்டிலிருந்தே வானொலி நிகழ்ச்சியை வழங்கி வருகிறார் Prager.
பெரும்பான்மை அமெரிக்கர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகவேண்டும், அப்படி நடந்தால், அவர்களுக்கு இயற்கை நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் என்றும், தடுப்பூசிகளால் ஏற்படும் நோய் எதிர்ப்பு சக்தியைவிட இயற்கையாகவே ஏற்படும் நோய் எதிர்ப்பு சக்தியே சிறந்தது என்று தான் நம்புவதாகவும் Prager தெரிவித்துள்ளார்.
இந்த வயதில் Prager கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளதால், கொரோனாவாலும், அதற்கு அவர் எடுக்கும் மருந்துகளாலும் அவருக்கு பக்க விளைவுகள் கடுமையாக இருக்கும்.
ஆகவே, அவர் மீது பரிதாபப்படுவதாக மக்கள் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்துள்ள நிலையில், Prager கூறியுள்ளதற்கு மாறாக, தடுப்பூசியே சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை வழங்க வல்லது என தேசிய சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.