குமரி கண்ட ஆய்வினை புறக்கணிக்கும் மத்திய அரசு ஆரியர்களின் வரலாற்றை கீழடியில் தேடியதா?
தமிழகத்தின் தொன்மையான வரலாறு குறித்து பேசக்கூடிய, எழுதக் கூடிய நபர்கள் அனைவருமே லெமூரியா – என்ற வார்த்தையை வாழ்வில் ஒருமுறையாவது கடந்து இருப்பார்கள்.
சிலப்பதிகாரத்தைப் பற்றி வகுப்பெடுத்த தமிழ் ஆசிரியர்கள் பலர், மாணவர்களுக்கு லெமூரியா என்ற பிம்பத்தை ஒருமுறையாவது உருவாக்கியவர்களாக இருக்கிறார்கள். தமிழர்கள் அறிந்தவரையில் லெமூரியா என்பது தமிழகத்தின் ஒரு பகுதியாக இருந்து, பின்னர் கடல் கோளினால் மறைந்து போன ஒரு நிலப்பரப்பு.
இதற்கான ஆதாரங்கள் நமது இலக்கியங்களில் ‘குமரிக் கண்டம்’ என்ற அழிந்த தமிழகப் பகுதியைப் பற்றிக் கிடைக்கும் குறிப்புகள். குமரிக் கண்டமே லெமூரியா கண்டம் என்பதே லெமூரியா பற்றி இன்று உள்ள பொதுவான புரிதல்.
ஆகவே லெமூரிய கண்டம் என்பது வேறு குமரிகண்டம் என்பது வேறு என்பதை விளக்குகின்றார் மன்னர் மன்னன் சுவடுகள் நிகழ்ச்சியில்