நீல நிற கூர்மையான கண்கள் மூலம் உலகளவில் வைரலான ஆசிய இளைஞனை நினைவிருக்கா? லண்டனில் கலக்கப்போகும் ஆச்சரியம்
பாகிஸ்தானை சேர்ந்த டீ விற்கும் இளைஞன் தனது காந்த கண்ணழகால் உலகம் முழுவதும் சில ஆண்டுகளுக்கு முன் வைரலான நிலையில் விரைவில் லண்டனில் தேநீர் விடுதி அமைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் உள்ள இட்வார் பஜாரில் அமைந்திருக்கும் தேநீர் கடையில் வேலை செய்தவர் அர்ஷத் கான் (23).
இவர் கடந்த 2016ஆம் ஆண்டு உலகளவில் வைரலனார். இதற்கு காரணம் அவரின் கண்கள் தான், அதாவது அர்ஷத் கானை பெண் புகைப்படக்காரர் ஜியா அலி சந்தித்துள்ளார்.
அர்ஷத்தின் நீல நிற கண்கள், கூர்மையான பார்வை ஜியாவை வெகுவாக கவர்ந்துள்ளது. இதையடுத்து அவரை தன்னுடைய கமெராவில் புகைப்படம் எடுத்துள்ளார்.
அதனை #chaiwala என்று ஹேஷ் டேக் இட்டு, பதிவேற்றம் செய்துள்ளார். இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவத் தொடங்கியது.
இதை தொடர்ந்து#chaiwala டிரெண்டாகி எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அவர் பெயரும் சாய்வாலா என பரவியது.
இந்த நிலையில் சமீபத்தில் அர்ஷத் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஒரு தேநீர் விடுதி ஆரம்பித்துள்ளார். மேலும் இந்தாண்டு இறுதியில் லண்டனில் தனது முதல் தேநீர் விடுதியை தொடங்கவுள்ளதாக அர்ஷத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேஸ்புக்கில், தொடர்ச்சியான முயற்சியால் மட்டுமே வலிமையும் வளர்ச்சியும் வரும். லண்டனில் இந்தாண்டு இறுதியில் முதல் தேநீர் விடுதியை திறக்கவுள்ளேன்.
எல்லோரும் என் பெயரை அர்ஷத் கான் என்றே வெளியில் தெரிவிக்குமாறு கூறுகிறார்கள். ஆனால் ‘chai wala’ என்பதே என் அடையாளமாகும், அதை மாற்றமாட்டேன் என தெரிவித்துள்ளார்.
அர்ஷத்தின் தேநீர் விடுதியில் தேநீரை தவிர்த்து மெனுவில் 20 வகையான உணவுகள் இடம்பெற்றுள்ளது.