இளவரசி கேட்டுக்கு சவால்கள் துவங்கிவிட்டன: பிரபல ஜோதிடக் கலைஞர் பரபரப்பு தகவல்
மன்னரின் புற்றுநோயை மிக துல்லியமாக கணித்த ஜோதிடக் கலைஞர், இளவரசி கேட்டுக்கு சவால்கள் துவங்கிவிட்டன என்று கூறியுள்ள விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
சவாலான ஆண்டு
இளவரசி கேட்டுக்கு, 2025ஆம் ஆண்டு சவாலான ஆண்டு என்று கூறியுள்ளார் பிரபல ஜோதிடக்கலைஞரான ஏதோஸ் (Athos Salomé).
எலிசபெத் மகாராணியின் மரணம் முதல் எலான் மஸ்க் ட்விட்டரில் செய்ய இருக்கும் மாற்றங்கள் வரை துல்லியமாக கணித்தவர், வாழும் நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்படும் ஏதோஸ்.
Image: Getty Images
சார்லஸ் மன்னராக முடிசூடப்படும் முன்பே, அவரது உடல் நலம் குறித்து எச்சரித்திருந்தார் ஏதோஸ். சார்லஸ் தமது உடல் நலன் தொடர்பில் இருமடங்கு கவனம் செலுத்த வேண்டும் என்றும் மன்னர் சார்லஸின் சிறுநீரக மற்றும் இனப்பெருக்க அமைப்பில் பிரச்சினைகள் ஏற்படலாம் எனவும் கணித்திருந்தார் அவர். அவர் கணித்ததுபோலவே, மன்னர் சார்லஸ் புரோஸ்ட்ரேட் வீக்கத்தாலும் புற்றுநோயாலும் பாதிக்கப்பட்டார்.
இளவரசி கேட்டுக்கு என்ன பிரச்சினை?
இளவரசி கேட் உடல் நலம் பாதிக்கப்பட்டு, வயிற்றில் அறுவை சிகிச்சை ஒன்று செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஓய்வெடுத்துவருகிறார்.
ஆனால், இளவரசி கேட்டுக்கு, முழங்கால், எலும்பு, கால் மற்றும் எலும்பு இணைப்புகளில் பிரச்சினை என்கிறார் ஏதோஸ். இதை அரண்மனை வட்டாரம் வெளியில் சொல்லாது என்றும் அவர் கூறுகிறார்.
Image: Getty Images
பெரிய சவால்
இப்படி உடல் நலத்தில் பிரச்சினைகள் இருந்தாலும், இளவரசி கேட்டைப் பொருத்தவரை, பெரிய பிரச்சினை இதுவல்ல, வேறொரு பெரிய பிரச்சினையை அவர் எதிர்கொள்ள இருக்கிறார் என்கிறார் ஏதோஸ்.
மன்னர் சார்லசுடைய உடல் நலம் பாதிக்கபட்டுள்ள நிலையில், அவரது பொறுப்புக்களை யார் ஏற்றுக்கொள்வது என்பது தொடர்பில் சகோதரர்கள் வில்லியம் மற்றும் ஹரிக்கிடையே பெரும் கருத்து வேறுபாடுகள் உருவாகும் என்றும், ஆக, முக்கியப் பொறுப்பை இளவரசி கேட் ஏற்கவேண்டியிருக்கலாம் என்றும் கூறும் ஏதோஸ், சவாலான விடயம் என்னவென்றால், பிரித்தானிய ராஜ குடும்பத்தில் முக்கியப் பொறுப்பை ஏற்க இளவரசி கேட் தயாராக இருப்பாரா என்பதுதான் என்கிறார்.
Image: Felipe Assis
2025ஆம் ஆண்டிலும், மார்ச், ஜூன், செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதங்கள் இளவரசியின் வாழ்வில் முக்கியமான காலகட்டம் என்கிறார் ஏதோஸ்.
இவை எல்லாம் ஏற்கனவே இளவரசி கேட்டின் விதியில் எழுதப்பட்டுள்ளன என்று கூறும் ஏதோஸ், ஆகவே, இளவரசி தனது மன நலன் மற்றும் உடல் நலனில், குறிப்பாக தனது எலும்புகள் தொடர்பில் கவனம் செலுத்தவேண்டும் என்கிறார்.
மேலும், 2025ஆம் ஆண்டில், இளவரசி கேட் எப்படி சவால்களை மேற்கொண்டு, பிரச்சினைகளை தாக்குப்பிடித்து அவருக்காக காத்திருக்கும் பொறுப்புகளையும் வாய்ப்புக்களையும் பயன்படுத்திக்கொள்ளப்போகிறார் என்பதைக் காண உலகமே காத்திருக்கும் என்றும் கூறியுள்ளார் ஏதோஸ்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |