24 ஆண்டுகளில் முதல்முறையாக..பாகிஸ்தானை வீழ்த்தி வரலாறு படைத்த இலங்கை மகளிர் படை
பாகிஸ்தான் மகளிர் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை ஒருநாள் தொடரை கைப்பற்றியது.
ஃபாத்திமா சனா
இலங்கை மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஹம்பன்டோடாவில் நடந்தது.
முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 187 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. குல் ஃபெரோஸா 40 ஓட்டங்களும், முனீபா அலி 34 ஓட்டங்களும் எடுத்தனர்.
இலங்கை அணித்தலைவர் சமரி அதப்பத்து, சேத்தனா விமுக்தி மற்றும் கவிஷா தில்ஹரி தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
பின்னர் களமிறங்கிய இலங்கை அணியில் விஷ்மி குணரத்னே 12 ஓட்டங்களில் வெளியேறிய, அணித்தலைவர் சமரி அதப்பத்து அதிரடி ஆட்டத்தில் மிரட்டினார்.
சமரி அதப்பத்து
சமரி அதப்பத்து (Chamari Athapaththu) 38 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 52 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

அடுத்து கைகோர்த்த ஹர்ஷிதா மற்றும் ஹாசினி வலுவாக கூட்டணி அமைத்து இலங்கையை வெற்றி பெற வைத்தனர்.
இலங்கை அணி 37.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 191 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்று, ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
பாகிஸ்தானுடனான இருதரப்பு தொடரை 24 ஆண்டுகளில் முதல் முறையாக இலங்கை அணி வென்றுள்ளது.
ஹர்ஷிதா சமரவிக்ரமா (Harshitha Samarawickrama) 71 ஓட்டங்களும், ஹாசினி பெரேரா (Hasini Perera) 50 ஓட்டங்களும் எடுத்தனர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |