இந்தியா vs அவுஸ்திரேலியா - சச்சினின் சாதனையை முறியடிப்பாரா ரோஹித் ஷர்மா?
இன்றைய அரையிறுதி போட்டியில் சச்சினின் சாதனையை முறியடிக்க ரோஹித் ஷர்மாவிற்கு வாய்ப்புள்ளது.
ரோஹித் சர்மா
துபாய் மற்றும் பாகிஸ்தானில் 2025 சாம்பியன்ஸ் டிராஃபி தொடர் நடைபெற்று வருகிறது. இன்றைய அரையிறுதி போட்டியில் இந்திய அணி, அவுஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
இந்த போட்டியில் ரோஹித் சர்மா, சச்சின் டெண்டுல்கரின் சாதனை ஒன்றை முறியடிக்க வாய்ப்புள்ளது. இதுவரை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 54 போட்டிகளில் அணித்தலைவராக ஆடியுள்ள ரோஹித் சர்மா, அந்த போட்டிகளில் 2,402 ஓட்டங்களை எடுத்துள்ளார்.
சச்சினின் சாதனை
முன்னதாக சச்சின் டெண்டுல்கர், 73 ஒருநாள் போட்டிகளில் அணிக்கு தலைமை தாங்கி 2,454 ஓட்டங்களை எடுத்துள்ளார். இன்றைய போட்டியில் ரோஹித் சர்மா, 52 ஓட்டங்களுக்கு மேல் எடுத்தால் சச்சினின் இந்த சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது.
இந்த பட்டியலில் சச்சினுக்கு முன்னதாக தோனி(6641), விராட் கோலி (5449), முகமது அசாருதீன் (5239), சவுரவ் கங்குலி (5082), ராகுல் டிராவிட் (2658) ஆகியோர் உள்ளனர். ரோஹித் சர்மா இன்றைய போட்டியில் 52 ஓட்டங்கள் எடுத்தால் இந்த பட்டியலில் 6 வது இடம் பிடிப்பார்.
இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இன்றைய அரையிறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி, இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அல்லது நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |