சந்திரயான்-3 பூமிக்கு திரும்புமா? 14 நாட்களுக்கு பிறகு விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் நிலை என்ன?

Chandrayaan-3
By Ragavan Aug 29, 2023 03:43 PM GMT
Report

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) லட்சிய விண்வெளி பணியான சந்திரயான்-3 ஆகஸ்ட் 23 அன்று மாலை 6:40 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

பிரக்யான் ரோவர் விக்ரம் லேண்டரில் இருந்து வெளியே வந்து சந்திர மேற்பரப்பில் கால் வைத்தது. அடுத்த 14 நாட்களுக்கு நிலவின் மேற்பரப்பில் தொடர் சோதனைகள் நடத்தப்படும். ரோவர் பிரக்யான் சந்திர மேற்பரப்பில் இருந்து ஏதேனும் தரவுகளை சேகரித்தால், அது விக்ரம் லேண்டருக்கு அனுப்பும். விக்ரம் பிரக்யான் சேகரிக்கப்பட்ட தரவுகளை பூமிக்கு அதாவது பெங்களூரில் உள்ள இஸ்ரோ கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பும்.

ஆனால் இப்போது 14 நாட்களுக்குப் பிறகு என்ன நடக்கிறது என்று மக்கள் கேட்கிறார்கள். சந்திரயான்-3 பூமிக்கு திரும்புமா? என்ன நடக்கும் என்ற விவரங்களை இங்கே பார்க்கலாம்..

what happens to Vikram Lander after 14 days, Chandrayaan-3 mission, What Will Pragyan Rover Do after 14 days, Sun Sets On Moon

சந்திரயான்-3 14 நாட்களுக்கு பிறகு என்ன நடக்கும்?

14 நாட்களுக்குப் பிறகு சந்திரன் இருட்டாக மாறும். விக்ரம் மற்றும் பிரக்யன் சூரிய ஒளியில் மட்டுமே வேலை செய்ய முடியும். ஆனால் நிலவின் தென்துருவம் மிகவும் குளிராக இருக்கிறது. இதனால் 14 நாட்களுக்கு பிறகு விக்ரம் மற்றும் பிரக்யான் செயலிழந்து விடும். அதாவது, சந்திரயான்-3 விண்கலம் தரவுகளை சேகரிக்க 14 நாட்கள் மட்டுமே இருக்கும்.

நிலவில் இரவும் பகலும் சேர்த்து ஒரு நாள் என்பது பூமியில் 28 நாட்கள். அதாவது பூமியின் காலத்தை கொண்டு அளவிட்டால் நிலா 14 நாட்கள் இரவில் கழிக்கும் பின்னர் சூரியன் உதயமாகி 14 நாட்கள் பகலை கொண்டிருக்கும்.

எனவே, ஒரு சந்திர பகல் 14 பூமி நாட்களுக்கு சமம். ஆனால், சந்திரனுக்கு மேல் சூரியன் மீண்டும் உதயமானதும், விக்ரமும் பிரக்ஞும் மீண்டும் தங்கள் வேலையைத் தொடங்குமா.? என்றால், இஸ்ரோ விஞ்ஞானிகளிடம் இப்போதைக்கு இதில் எந்த ஐடியாவும் இல்லை. அதாவது இரண்டுமே மீண்டும் செயல்படவும் வாய்ப்புள்ளது. இரண்டும் மீண்டும் செயல்பட தொடங்கினால் அது இந்தியாவின் சந்திர பயணத்திற்கு போனஸாக இருக்கும்.

ஏனெனில் அடுத்த 14 நாட்கள் நிலவின் தென்துருவம் சூரிய ஒளி இல்லாமல் கடுமையான மைனஸ் வெப்பநிலையில் இருக்கும், அங்கு மைனஸ் 180 முதல் மைனஸ் 200 டிகிரி வரை செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வெப்பநிலையில் அங்கு என்னவேண்டுமானாலும் நடக்கலாம். இதனால், விக்ரம் லெண்டரும் பிரக்யான் ரோவரும் செயலிழந்து போகவும் வாய்ப்புள்ளது.

சந்திரயான்-3 பூமிக்கு திரும்புமா?

விக்ரமும் பிரக்யனும் மீண்டும் பூமிக்கு வரத் தேவையில்லை. இரண்டும் நிலவிலேயே இருக்கும். இஸ்ரோ ஏற்கனவே சந்திரயான் 3 தரையிறங்கும் தளத்தின் படத்தைப் பகிர்ந்துள்ளது. புதன்கிழமை மாலை 6.04 மணிக்கு மென்மையான தரையிறங்கலுக்குப் பிறகு விக்ரம் தனது கேமராவில் இந்தப் படத்தை எடுத்தது.

சந்திரயான்-3 நிலவின் தென் துருவத்தில் ஒப்பீட்டளவில் தட்டையான மேற்பரப்பில் தரையிறங்கியது. சந்திரயான்-3-ன் மொத்த எடை 3,900 கிலோ. ப்ரொபல்ஷன் மாட்யூல் 2,148 கிலோ எடையும், லேண்டர் மாட்யூல் விக்ரம் 1,752 கிலோ எடையும், ரோவர் பிரக்யான் 26 கிலோவும் அடங்கும்.

what happens to Vikram Lander after 14 days, Chandrayaan-3 mission, What Will Pragyan Rover Do after 14 days, Sun Sets On Moon

இப்போது நிலவில் ரோவர் பிரக்யான் என்ன செய்யும்?

ஆய்வுகள் சந்திர மேற்பரப்பின் வேதியியல் கலவையை ஆய்வு செய்கின்றன. சந்திர மண் மற்றும் பாறைகளை ஆராய்கிறது. இது துருவப் பகுதிகளுக்கு அருகிலுள்ள சந்திர மேற்பரப்பில் உள்ள அயனிகள், எலக்ட்ரான்கள் மற்றும் வெப்ப பண்புகளின் அடர்த்தியை அளவிடுகிறது. வேறு எந்த நாடும் நிலவின் தென் துருவத்திற்குச் செல்லாத நிலையில், இது இந்தியாவின் சாதனை.

ரஷ்யாவின் லூனா-25 விண்கலமும் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க திட்டமிடப்பட்டது. இருப்பினும், ரஷ்ய லூனா-25 மிஷன் ஆகஸ்ட் 21 அன்று விபத்துக்குள்ளானது. இந்தியாவின் இஸ்ரோ தனது இரண்டாவது முயற்சியாக நிலவின் தென் துருவத்தில் சந்திரயானை வெற்றிகரமாக தரையிறக்கியுள்ளது. முன்னதாக 2019-ல் சந்திரயான்-2 விண்கலம் தரையிறங்கியது.

what happens to Vikram Lander after 14 days, Chandrayaan-3 mission, What Will Pragyan Rover Do after 14 days, Sun Sets On Moon

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  
what happens to Vikram Lander after 14 days, Chandrayaan-3 mission, What Will Pragyan Rover Do after 14 days, Sun Sets On Moon's South Pole, Vikram Lander, Moon Temperature, Moon Southpole, Pragyan Rover
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US