ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவில் கால்வைத்த புலம்பெயர்ந்தோர்... சந்தித்த சற்றும் எதிர்பாராத திகில் அனுபவம்
ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் கால்வைத்த புலம்பெயர்ந்தோர், பேருந்துகளில் ஏற்றப்பட்டு 500 மைல்கள் பயணத்திற்குப்பின் ஸ்காட்லாந்திலுள்ள காவல் மையம் ஒன்றிற்கு கொண்டு செல்லப்பட்டார்கள்.
பிரித்தானிய உள்துறைச் செயலரான பிரீத்தி பட்டேல், ஆங்கிலக்கால்வாயை கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைவோரை தடுத்து நிறுத்த தன்னாலான கடுமையான முயற்சிகளை எல்லாம் எடுத்துவருகிறார்.
அந்த வகையில், இனி ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் கால்வைப்போர் அல்பேனியா பொன்ற நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்படுவது தொடர்பாக ஒரு திட்டம் குறித்து அமைச்சர்கள் விவாதித்து வருவதாக ஒரு செய்தி வெளியாகி கலக்கத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது சொல்லாமலே ஒரு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார் பிரீத்தி!
ஆம், ஆங்கிலக்கால்வாயைக் கடந்து கென்டில் சென்று இறங்கிய புலம்பெயர்ந்தோர், பேருந்துகளில் ஏற்றப்பட்டு எட்டு மணி நேரப் பயணத்துக்குப் பின், 500 மைல் தொலைவில் அமைந்துள்ள ஸ்காட்லாந்திலிருக்கும், Dungavel immigration detention centre என்னும் காவல் மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்கள்.
இந்த காவல் மையத்தில், பெண்களுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தலைக் கொடுத்தவர்கள் என அறியப்பட்ட ஆண்களுடன் பெண்கள் ஆபத்தான வகையில் தங்கவைக்கப்படுவதாக திகிலளிக்கும் செய்தி ஒன்றை பிபிசி ஊடகம் சமீபத்தில் வெளியிட்டிருந்தது.
தற்போது அதே காவல் மையத்துக்குதான் புலம்பெயர்ந்தோர் கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.