எண்ணெய்க்கு பதில் எச்சில் துப்பி சப்பாத்தி சுட்ட மாஸ்டர்! கூண்டோடு கைது செய்த பொலிஸ்.. அதிர்ச்சி வீடியோ
இந்தியாவில் எச்சில் துப்பி சப்பாத்தி சுட்ட மாஸ்டர் மற்றும் அவருடன் பணியில் ஈடுபட்ட அனைவரையும் பொலிஸ் அதிரடியாக கைது செய்துள்ளது.
உத்தரபிரதேசத்தில் லக்னோ பகுதியில் இமாம் அலி தாபா என்ற உணவகம் உள்ளது. இந்நிலையில் அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவர் சப்பாத்தி மாவில் எச்சில் துப்பிய வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் அதிர்வலையை கிளப்பியுள்ளது.
அந்த வீடியோவில் ஒருவர் சப்பாத்தி உருட்டுகிறார். அப்போது யாரும் பார்க்காத நேரத்தில் அதன் நடுவில் எண்ணெய்க்கு பதில் எச்சிலை துப்புகிறார். ஆனால் பக்கத்தில் நின்று கொண்டிருந்த மற்றோருவர் இந்த சம்பவத்தை கண்டும் காணாமல் அவரது பணியை தொடர்ந்து செய்து கொண்டிருந்தார்.
இந்த வீடியோ இணையத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பி வரும் நிலையில் அந்த ஹோட்டலில் பணிபுரிந்த வந்த 6 நபர்களை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
#Lucknow A cook along with five others was arrested from Kakori area after a video showing him spitting on food went viral. pic.twitter.com/aEaZhlmMYa
— Adeeb Walter (@WalterAdeeb) January 11, 2022
இதற்கு முன்பும் சாலையோர கடைகளில் உணவு தயாரிக்கும்போது இது போன்ற சுகாதார கேடுகள் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.