இளவரசர் பிலிப்பிற்காக பொதுமக்கள் செய்த செயலைக் கண்டு கலங்கிய சார்லஸ்-கமிலா: வெளியான உருக வைக்கும் புகைப்படங்கள்
இளவரசர் பிலிப்பிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக போடப்பட்ட பூக்களைக் கண்டு, அவரது மகனும், இளவரசருமான சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமிலா கண்கலங்கினர்.
கடந்த வெள்ளிக்கிழமை இளவரசர் பிலிப் உயிரிழந்தார். அவரது மறைவைத் தொடர்ந்து பிரித்தானியாவில் வரும் சனிக் கிழமை வரை துக்கநாட்களாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா விதிமுறைகள் காரணமாக, பொதுமக்கள் யாருக்கும் அனுமதி இல்லாததால், பக்கிங்ஹாம் அரண்மனைக்கு வெளியே நூற்றுக்கணக்கானோர் தங்களது அஞ்சலியை செலுத்தினர்.
அந்த பூக்கள் அனைத்தும், செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையில் உள்ள மார்ல்பரோ மாளிகைக்கு மாற்றப்பட்டது.
கொரோனா பரவல் காரணமாக பூக்களை போட வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அப்படி நீங்கள் அவருக்கு அஞ்சலி செலுத்த நினைத்தால், தொண்டு நிறுவனத்திற்கு ஏதேனும் நன்கொடை கொடுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டது.
இருப்பினும், பூக்களால் அஞ்சலி செலுத்துவது என்பது பாரம்பரிய வழிமுறை என்பதால், மக்கள் அதை எல்லாம் அந்தளவிற்கு பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், தொடர்ந்து தங்கள் பூக்களால் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், St James's Palace-ல் உள்ள Marlborough அரண்மனைக்கு வந்த மகன் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமிலா, இளவரசர் பிலிப்பிற்கு பொதுமக்கள் பூக்களால் செலுத்தியிருந்த அஞ்சலியைக் கண்டு கண்கலங்கினார். அது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.