எனக்கு என் பிள்ளைகள் இருவரும் வேண்டும்... மகன்களை இணைக்க இளவரசர் சார்லஸ் செய்த ஒரு ராஜதந்திரம்
குடும்பத்தை வழிநடத்தும் பொறுப்பு இப்போது தந்தையை இழந்து நிற்கும் இளவரசர் சார்லஸ் தோள்களில் விழுந்திருக்கிறது.
பொறுப்பேற்றதுமே, தன் பொறுப்பை சரியாக செய்திருக்கிறார் சார்லஸ் எனலாம்... அவர் செய்த ஒரு சிறிய செயல், அவர் எடுத்த ஒரு சமயோகித முடிவு, குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும் ஒரு வாய்ப்பை உருவாக்கியுள்ளது.
தந்தையை இழந்துவிட்ட சார்லஸுக்கு, இப்போதுதான் தன் பிள்ளகளின் அருகாமை அதிகம் தேவைப்படுகிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் அவர்கள் ஆளுக்கொரு பக்கம் முகத்தைத் திருப்பிக்கொண்டிருந்தால் நன்றாகவா இருக்கும்.
பாட்டியாரின் யோசனையின்பேரில் வில்லியமும் ஹரியும் தங்கள் தாத்தாவின் சவப்பெட்டியின் பின்னால் நடக்கும்போது சேர்ந்துவிடாமல் இருப்பதற்காக, அவர்களுக்கு நடுவே இளவரசர் பீற்றர் பிலிப் என்பவர் நடப்பது என முடிவு செய்யப்பட்டு, அதுவே நடக்கவும் செய்தது.
ஒரு மகாராணியாராக குழப்பங்களைத் தவிர்க்கும் வகையில் அவர்களது பாட்டியார் அப்படி ஒரு முடிவெடுத்தாலும், ஒர் தந்தையாக சர்லஸ் வேறு முடிவு எடுத்திருக்கிறார். என்ன இருந்தாலும் அடுத்த மன்னர் அவர்தானே!
வழக்கமாக ராஜ குடும்பத்தினர் எந்த விசேஷங்களுக்கும் காரில் செல்வார்கள், காருக்குள் இருந்து மக்களைப் பார்த்து கைகளை ஆட்டிக்கொண்டே செல்வார்கள் அவ்வளவுதான். ஆனால், சார்லஸ் அதை மாற்றியிருக்கிறார்.
ஏற்கனவே திட்டமிடப்பட்டபடி, தேவாலயத்தில் இறுதிச்சடங்கு நிகழ்ச்சி முடிந்தபின் ராஜ குடும்பத்தினரை ஏற்றிச் செல்ல கார்கள் வந்தும், கார் வேண்டாம் என ஒரு சின்ன சமிக்ஞை கொடுத்து தனது காரை அனுப்பிவிட்டார் சார்லஸ். இப்போதைக்கு அவர்தான் குடும்பத் தலைவர்.
ஆக, அவரே கார் வேண்டாம் என்றதும், மற்றவர்களும் கார்களை அனுப்பிவிட்டார்கள். சார்லஸின் ராஜதந்திரம் பலன் கொடுத்தது என்றே கூறலாம். ஆம், வில்லியம், அவரது மனைவி கேட் ஆகியோர் தங்கள் தம்பி ஹரிக்காக ஒரு கணம் தாமதித்து, அவர் வந்ததும் மூவருமாக சேர்ந்து நடக்கத் தொடங்கினார்கள்.
என்ன நடக்கும், வில்லியமும் ஹரியும் பேசிக்கொள்வார்களா அல்லது முகத்தைத் திருப்பிக்கொள்வார்களா என கேள்விகள் பலர் மனதிலும் ஒலித்தவண்ணம் இருந்த நிலையில், வழக்கம் போல வில்லியம், கேட் மற்றும் ஹரி ஆகிய மூவரும் முன்பு போலவே பேசிக்கொண்டே நடக்க, அந்த காட்சி கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது.
ஆக, சார்லஸ் நினைத்தது நடந்துவிட்டது என்றே கூறலாம். அடுத்து மகாராணியாரின் பிறந்தநாளும் நெருங்கிவரும் நிலையில், குடும்பம் எப்படி ரியாக்ட் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!