"இளவரசர் சார்லஸ் நினைத்தால் சட்டத்தையே திருத்தி எழுதி" இதை செய்யலாம்.! யாரும் எதிர்பாராத தகவலை வெளியிட்ட நபர்!
பிரித்தானிய மகாராணியாவுக்குப் பிறகு நேரடியாக இளவரசர் வில்லியமை ஆட்சி அதிகாரத்தில் கொண்டு நிறுத்தலாம் என யாரும் எதிர்பாராத தகவலை அரச குடுபத்துக்கு நெருங்கிய நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இளவரசர் சார்லஸ் நினைத்தால், அரசியலமைப்பை மீண்டும் திருத்தி எழுதலாம், அது மாகாராணியார் இறக்கும் போது இளவரசர் வில்லியம் நேரடியாக கிரீடத்தை அணிய அனுமதிக்கலாம் என்று இளவரசி டயானாவின் முன்னாள் குரல் பயிற்சியாளர் ஸ்டிவார்ட் பியர்ஸ் (Stewart Pearce) கூறியுள்ளார்.
மகாராணிக்கு பிறகு அரியணை வரிசையில் வேல்ஸ் இளவரசர் சார்லஸ் தான் உள்ளார். அனால், அவர் ராஜினாமா செய்து, அடுத்ததாக அவரது மூத்த மகன் வில்லியமை மன்னராக்க அனுமதிக்கலாம் என ஸ்டிவார்ட் பியர்ஸ் கூறுகிறார்.
ஸ்டிவார்ட் பியர்ஸ் டயானாவுடன் இணைத்து 2 ஆண்டுகள் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்டிவார்ட் பியர்ஸ் டெய்லி ஸ்டார் செய்தி நிறுவனத்திடம் இது குறித்து கூறியபோது: "ராணியார் வெளியேறத் தயாராகி வருகிறார், அவள் வெளியேறும்போது முடியாட்சியின் முழு மனோ-உடல் தன்மையும் மாறும்.
யாருக்கு தெரியும், அரசியலமைப்பு சட்டம் மீண்டும் எழுதப்படலாம்.
அவர் (சார்லஸ்) அரியணை ஏற்காமல் போகலாம், அவர் அதை தனது மகனிடம் ஒப்படைக்கலாம்.
அல்லது, அது அவ்வளவு கடினமான பணி என்பதால், அவர் அதை செய்ய விரும்பாமல் போகலாம்" என கூறியுள்ளார்.