அங்கன்வாடி மையத்தில் வேலை வாய்ப்பு... விண்ணப்பிப்பது எப்படி?
தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையங்களில் காணப்படும் காலியிடங்களை நிரப்ப தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அங்கன்வாடி
சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறையின் கீழ் அங்கன்வாடி மையங்கள் தமிழ்நாட்டில் செயல்படுகின்றது.
அங்கன்வாடியில் பணியாளர் மற்றும் உதவியாளர்கள் அரசின் மூலம் நிரப்படுகின்றது. இதில் 7,783 காலி பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியான நிலையில், தற்போது இதற்கான விண்ணப்பங்களை பெற தொடங்கியுள்ளனர்.
சென்னையில் மட்டும் 308 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு வரும் ஏப்ரல் 23ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.
இந்த அங்கன்வாடி பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் பெண்களின் வயது வரம்பானது 25 வயது முதல் 35 வயது வரை இருக்க வேண்டுமாம். அதுவே உதவியாளர் பணிக்கு 20 முதல் 40 வயது வரை இருக்கலாம்.
கணவரை இழந்தவர்கள், ஆதரவற்ற பெண்கள், எஸ்சி/எஸ்டி வகுப்பினர் ஆகியோருக்கு வயது வரம்பு 20 முதல் 45 வயது வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 20 முதல் 43 வரை வயது உச்சவரம்பு வரையறை செய்யப்பட்டுள்ளது.
அங்கன்வாடி பணியாளருக்கு கல்வித்தகுதியாக 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமாம். அதுவே உதவியாளர் பணிக்கும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தமிழ் சரளமாக எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
சம்பள விபரம்
அங்கன்வாடி பணியாளருக்கு முதல் வருடம் ரூ.7,700 முதல் ரூ.24,200 வரை வழங்கப்படும். அதுவே குறு அங்கன்வாடி பணியாளருக்கு முதல் வருடம் ரூ. 5,700 முதல் 18,000 வரை சம்பளமாக கொடுக்கப்படும்.
அதுவே உதவியாளர் பணிக்கு ரூ. 4,100 முதல் 12,500 வரை சம்பளமாக கொடுக்கப்படும். இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்கானல் மூலம் தகுதியானவர்களை மட்டும் தெரிவு செய்வார்கள்.
அங்கன்வாடி மையங்கள் அமைந்திருக்கும் பகுதியில் இருப்பவர்கள் முன்னுரிமை அளிக்கப்படும். ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அட்டை ஆகியவை முகவரி சான்றிதழ்களாக எடுத்துகொள்ளப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
சென்னையில் உள்ள அங்கன்வாடி பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://icds.tn.gov.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யவும்.
அதனை நிரப்பி, அறிவிக்கப்பட்டுள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் நகர பஞ்சாயத்துகளிலுள்ள குழந்தைகைள் மையம் அமைந்துள்ள வார்டாக இருக்க வேண்டும்.
அந்தந்த மாவட்டத்தில் வட்டாரம் / திட்டம் வாரியாக நேரடி நியமனம் செய்யப்படவுள்ள அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகங்களிலும், தகவல் பலகையிலும் ஒட்டப்படும்.
விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச் சான்றிதழ், 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், குடும்ப அட்டை / ஆதார் அட்டை சாதிச்சான்று, வாக்காளர் அடையாள அட்டை ஆகிய சான்றிதழ்களின் சுயசான்றொப்பமிட்ட (Self attested) நகல்கள் இணைக்கப்பட வேண்டும்.
விதவை, கணவரால் கைவிடப்பட்டோர், ஆதரவற்ற பெண் (தாய் தந்தை இறப்பு சான்று) மற்றும் மாற்றுத்திறனாளிகள் அதற்கான சான்றிதழ் நகலும் மற்றும் சுயசான்றொப்பமிட்டு (Self attested) இணைக்க வேண்டும்.
ஆனால் நேர்காணலின் போது அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ள வேண்டும்.