சென்னைதான் என் முதல் வீடு... ஜேர்மனியில் வாழும் நபரின் கோரிக்கை
ஜேர்மனியில் வாழும் யூதர் ஒருவர், தானும் தனது மூதாதையர்களும் இந்தியாவின் தென்பகுதியிலுள்ள தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் வாழ்ந்துவந்ததாகவும், தனக்கு சென்னைதான் முதல் வீடு என்றும் தெரிவித்துள்ளார்.
அவர், தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறைக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.
பல தலைமுறைகளாக சென்னையில் வாழ்ந்துவந்த குடும்பம்
பிரித்தானிய ஆட்சியின் கீழ், மதராஸ் மாகாணமாக இருந்த தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில், 10 தலைமுறைகளுக்கும் மேலாக வாழ்ந்துவந்துள்ளது டேவிட் லேவியின் (Davvid Levi) குடும்பம்.
DAVVID LEVI
போர்ச்சுக்கீசிய வம்சாவளியினரான டேவிடுடைய பாட்டியின் தாயாகிய ரோஸா (ரோஜாப்பூவின் நினைவாக அவருக்கு அந்த பெயரிடப்பட்டதாம்), ஆஸ்டர்டாம் நாட்டு வைர வியாபாரியான ஐசக்கை (Isaac Henriques De Castro) மணந்துகொண்டதும், இருவருமாக சென்னைக்கு குடிபெயர்ந்துள்ளார்கள்.
ஆனால், 1944ஆம் ஆண்டு, ஜேர்மனிக்குச் சென்றிருந்த அவர்கள், யூத இனப்படுகொலையின்போது கொல்லப்பட்டுள்ளார்கள். அவர்கள் உயிரிழப்புக்குப் பின் அவர்களுடைய ஒரே மகனான லேவி (Levi Henriques De Castro) மட்டும் இந்தியாவுக்குத் திரும்பியுள்ளார். இந்த லேவியின் பேரன்தான் டேவிட்.
DAVVID LEVI
டேவிடுடைய கோரிக்கை
சென்னைதான் எனது முதல் வீடு என்று கூறும் டேவிட், தற்போது தனது குடும்பத்துடன் ஜேர்மனியில் வாழ்ந்துவருகிறார். 2020ஆம் ஆண்டு நடந்த ஒரு சொத்துப்பிரச்சினை காரணமாக, பாதுகாப்பு கருதி குடும்பத்துடன் ஜேர்மனிக்குச் சென்றுவிட்டார் டேவிட்.
DAVVID LEVI
பல ஆண்டுகளாக, சென்னையில் வாழ்ந்த தனது மூதாதையர்கள் உட்பட தனது குடும்பத்தின் வரலாற்றை ஆவணப்படுத்திவரும் டேவிட், தனது குடும்பத்துக்கு சொந்தமான, புனிதமான சில யூத புத்தகங்கள் உட்பட சில கலைப்பொருட்களை சென்னையில் வாழ்ந்த தங்கள் மூதாதையர்களை நினைவுகூரும் வகையில் அருங்காட்சியகத்தில் பாதுகாக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
அவரது கோரிக்கையை பரிசீலித்துவருவதாக தமிழ்நாடு தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
DAVVID LEVI
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |