சில்லு சில்லாய் சிதறும் கமலின் மக்கள் நீதி மய்யம்! ‘சென்னை தமிழச்சியும்' கட்சியிலிருந்து விலகல்!
மக்கள் நீதி மய்யத்தின் சுற்றுச்சூழல் பிரிவின் பொறுப்பாளராக இருந்த ‘சென்னை தமிழச்சி' பத்மப்ரியா கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஆர்.மகேந்திரன், சற்று முன் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபுவை தொடர்ந்து பத்மப்ரியாவும் கடசியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது மக்கள் நீதி மய்யம் கட்சியினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020-க்கு (2020 EIA) எதிராக குரல் கொடுத்ததின் மூலம் பிரபலமான பத்மப்ரியா, 2021 தமிழக சட்டமன்றத்தேர்தலில் மதுரவாயில் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக போட்டியிட்டார்.
மதுரவாயல் தொகுதியில் 12.2 சதவித வாக்குகள் பெற்று 3ம் பிடித்து காட்டினார்.
ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியான நாள் முதல் மக்கள் நீதி மய்யம் கட்சிக்குள் பிரச்சினை தொடங்கியது.
முதலில் கட்சியின் துணைத் தலைவராக இருந்த ஆர்.மகேந்திரன் விலகினார்.
அவரை தொடர்ந்து இன்று பொதுச்செயலாளர்களில் ஒருவராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி விலகினார். தனிப்பட்ட காரணங்களுக்காக தான் காட்சியிலிருந்து விலகுவதாக சந்தோஷ் பாபு கூறியுள்ளார்.
அடுத்ததாக மதுரவாயல் மநீம வேட்பாளர் பத்மப்ரியா விலகியுள்ளார்.
என் மீது நம்பிக்கை கொண்டு எனக்கு வாக்களித்த மக்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
என்னைப் போல் எவ்வித அரசியல் பின்புலம் இல்லாத ஒரு நடுத்தர குடும்பப் பெண்ணை உங்கள் வீட்டுப்பிள்ளையாக எண்ணி ஏற்றுக்கொண்டு வாக்களித்தமைக்கும் நம்பிக்கை கொடுத்து ஊக்கம் கொடுத்தமைக்கும் நான் என்றும் உங்களுக்கு கடமைப்பட்டுள்ளேன்.
சில காரணங்களுக்காக நான் சார்ந்திருந்த மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக முடிவு செய்துள்ளேன். அதை எனது தொகுதி மக்களான உங்களுடன் பகிர்வது எனது கடமை என்று கருதி தெரிவித்துக்கொள்கின்றேன்.
— Padma Priya (@Tamizhachi_Offl) May 13, 2021
எனது களப்பணி எப்போதும் போல இன்னும் சிறப்பாக தொடரும். #PadmaPriya
சில காரணங்களுக்காக நான் சார்ந்திருந்த மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக முடிவு செய்துள்ளேன். அதை எனது தொகுதி மக்களான உங்களுடன் பகிர்வது எனது கடமை என்று கருதி தெரிவித்துக்கொள்கின்றேன்.
எனது களப்பணி எப்போதும் போல இன்னும் சிறப்பாக தொடரும் என பத்மப்ரியா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.