படுமோசமாக உள்ள சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் பிட்சுகள்! எழுந்துள்ள கேள்வி
சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் பிட்ச்கள் படுமோசமாக உள்ள நிலையில் அங்கு ஐபிஎல் போட்டிகள் தொடர வேண்டுமா என்ற விவாதம் எழுந்துள்ளது.
சென்னை பிட்ச் படுமோசமாக உள்ளது என டேவிட் வார்னர் அன்று கூறியது இன்று பல விரர்களின் அனுபவமாக மாறியுள்ளது.
சமீபத்தில் இங்கு நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸுக்கும் இடையேயான ஐபிஎல் ஆட்டம் அறுவையின் உச்சக்கட்டமாக இருந்தது.
மும்பை 131 ரன்கள் மட்டுமே எடுக்க அதனை பஞ்சாப் அணி 1 விக்கெட்டை மட்டுமே இழந்திருந்தாலும் 18வது ஓவரில் எடுத்து வெற்றி பெற்றது என்பது ஐபிஎல் போட்டிகளுக்கான எதிர்மறை விளம்பரமாகப் பார்க்கப்பட வேண்டியதாகும்.
சேப்பாக்கத்தில் தொலைக்காட்சியில் காட்டப்படும் 8 பிட்ச்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கலரில் உள்ளன. பார்க்கவே படுபயங்கரமாக உள்ளது பந்துகள் நின்று அரைநிமிடம் கழித்து திரும்பும்பிட்சை எங்காவது பார்த்ததுண்டா? இந்த பிரச்சினையை இங்கு விளையாடிய அனைத்து ஐபிஎல் அணிகளும் சந்தித்துள்ளன.
இது போன்ற மோசமான பிட்ச்சுகளால் தரமான வீரர்களின் திறமைகள் பாழக்கப்படுவதாக சமூகவலைதளத்தில் விவாதிக்கப்படுகிறது.
மேலும் நல்ல தரமான பிட்சுகளை போட பிசிசிஐ முயற்சி எடுக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.