செட்டிநாடு உக்காரை கொழுக்கட்டை.., இலகுவாக செய்வது எப்படி?
பண்டிகை காலங்களில் இருந்தே வீட்டில் விசேஷங்கள் என்றால் உடனே நாம் செய்யக்கூடியது இனிப்பு தான்.
கொழுக்கட்டை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் ஓர் இனிப்பு வகை.
அந்தவகையில், தித்திக்கும் சுவையில் செட்டிநாடு உக்காரை கொழுக்கட்டை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பாசி பருப்பு- ¼ கப்
- எண்ணெய்- 2 ஸ்பூன்
- ரவை- 2 ஸ்பூன்
- தேங்காய்- ¼ கப்
- வெல்லம்- 1 கப்
- ஏலக்காய் தூள்- ¼ ஸ்பூன்
- நெய்- 2 ஸ்பூன்
- அரிசி மாவு- 1 கப்
செய்முறை
முதலில் குக்கரில் பாசிபருப்பை சேர்த்து 2 முறை நன்கு கழுவி 1 கப் தண்ணீர் ஊற்றி வேகவைத்து மசித்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு வாணலில் எண்ணெய் சேர்த்து அதில் ரவையை சேர்த்து வறுத்து அதனுடன் தேங்காய் சேர்த்து வறுக்கவும்.
பின் அதனையுடன் வேகவைத்த பாசிப்பருப்பு சேர்த்து கிளறி வெல்லம் சேர்த்து கிளறவும்.
இதற்கடுத்து கொஞ்சம் கெட்டியாகி வந்ததும் அதில் ஏலக்காய் தூள் மற்றும் நெய் சேர்த்து கிளறி எடுத்துக்கொள்ளவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, உப்பு, எண்ணெய் மற்றும் வெந்நீர் சேர்த்து கெட்டியாக பிணைந்து எடுத்துக்கொள்ளவும்.
இறுதியாக பிணைந்த மாவில் செய்துவைத்த பூரணம் வைத்து இட்லி பாத்திரத்தில் வேகவைத்து எடுத்தால் செட்டிநாடு உக்காரை கொழுக்கட்டை தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |