சாப்பிடும் முன் சியா விதை தண்ணீர் குடித்தால் உடல் எடை குறையுமா?
பூமியில் விளையக்கூடிய விதைகளிலேயே சியா விதையில் தான் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
சியா விதைகளில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்கள், விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இதில் நார்ச்சத்துக்கள், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், புரதங்கள் போன்ற சத்துக்கள் காணப்படுகிறது.
இதனை தண்ணீருடன் ஊறவைத்து எடுத்து கொள்வது நல்லது. குறிப்பாக சாப்பிட்ட பிறகு தண்ணீரை உறிஞ்சிக் கொண்டு நல்ல பாக்டீரியாக்களை குடலில் உருவாக்கும். மேலும் இது எடை இழப்புக்கு மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.
எனவே இவற்றை எப்படி எடுத்து கொள்ளலாம் என்பதை இங்கே பார்ப்போம்.
எப்படி எடுத்து கொள்ளலாம்?
ஒரு டீ ஸ்பூன் சியா விதைகளை 4 கிளாஸ் தண்ணீரில் போட்டு 15 - 20 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பிறகு அந்த தண்ணீர் குடிக்கத் தயாராகிவிடும்.
எப்படி உதவுகின்றது ?
- உணவு உண்பதற்கு அரை மணி நேரம் முன்பாக, சியா விதை ஊற வைத்த தண்ணீரை குடித்து வருகிறபோது, அது பசியைக் கட்டுப்படுத்துகிறது. அதனால் வழக்கமாக எடுத்துக் கொள்ளும் உணவுகளில் உள்ள அதிகப்படியான கலோரிகள் பாதியாகக் குறைகிறது.
- காலை உணவு, மதிய உணவு அல்லது இரவு உணவு என மூன்று வேளை உணவுக்கு முன்பாகவும் இந்த சியா தண்ணீரைக் குடித்தால் இயல்பாகவே நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவின் அளவு பாதியாகக் குறைந்துவிடும்.
பக்க விளைவுகள்
- 3 நாளைக்கு மேல் தொடர்ந்து உணவுக்கு முன் இந்த சியா விதை நீர் குடித்து வந்தால் வயிற்று உப்புசம் மற்றும் மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
- அதேபோல், இந்த பானத்தை அடிக்கடி உட்கொள்வது, ஒரு நாளைக்குப் பலமுறை குடிப்பது போன்றவை ஒழுங்கற்ற உணவு முறைகளைத் தூண்டிவிடும் அபாயமும் உண்டு. அதோடு உணவுக் கோளாறை ஏற்படுத்தி, உடலில் ஊட்டச்சத்துக்களை இழக்க வழி வகுக்கிறது.
குறிப்பு
சியா விதைகளை கொஞ்சம் கொஞ்சமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக எடையைக் குறைக்க சியா விதைகளை எஎடுத்துக் கொள்பவர்கள் ஆரம்பத்திலேயே புட்டிங் போன்று எடுத்துக் கொள்ளாமல் சிறிது சிறிதாக உணவில் சேர்து்துக் கொள்ளுங்கள்.