லண்டனில் 4 பிஞ்சு சிறார்களின் உயிரைப் பறித்த கோர சம்பவம்: பெண் மீது பாய்ந்த வழக்கு
தெற்கு லண்டனில் ஏற்பட்ட மோசமான தீ விபத்தில் சிக்கி நான்கு குழந்தைகள் பரிதாபமாக பலியானதை அடுத்து, தாயார் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இக்கட்டான நேரத்தில் கைவிட்டதாக
தொடர்புடைய கோர சம்பவம் லண்டனில் உள்ள Sutton பகுதியில் கடந்த 2021 டிசம்பர் மாதம் நடந்துள்ளது. இந்த விவகாரத்தில் 29 வயதான Deveca Rose என்பவர் மீது நான்கு பிரிவுகளில் கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன், சொந்த பிள்ளைகளை இக்கட்டான நேரத்தில் கைவிட்டதாகவும் கூறி வழக்குப் பதிந்துள்ளனர்.
@bbc
Deveca Rose திங்கட்கிழமை குரோய்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என தெரியவந்துள்ளது. இரட்டை சகோதரர்களான 3 வயது Leyton மற்றும் Logan Hoath, மூன்று வயதேயான Kyson மற்றும் Bryson Hoath ஆகிய சிறார்கள் 2021 டிசம்பர் 16ம் திகதி ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பரிதாபமாக பலியாகினர்.
தாயார் மீது கொலைக் குற்றம்
மீட்புக்குழுவினரும் அவசர மருத்துவ உதவிக்குழுவினரும் முன்னெடுத்த அனைத்து முயற்சிகளும் ஏமாற்றத்தை அளிக்கவே, சிறார்கள் நால்வரும் மரணமடைந்தனர். சம்பவத்தன்று சுமார் 6.55 மணியளவில் வீடு தீப்பற்றி எரியவே, லண்டன் தீயணைப்பு வீரர்கள் சுமார் 60 பேர்கள் 8 வாகனங்களுடன் கடுமையாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
Credit: UKNIP
குடியிருப்புக்குள் சிக்கியிருந்த 4 சிறார்களும் மீட்கப்பட்டு, உடனடியாக CPR வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அருகாமையில் உள்ள இரு மருத்துவமனைகளுக்கு அந்த சிறார்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஆனால் அவர்கள் மரணமடைந்ததாக மருத்துவமனையில் இருந்து உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையிலேயே தற்போது சிறார்களின் தாயார் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
@bbc
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |