வீடு ஒன்றில் அநாதரவாக விடப்பட்டிருந்த பிள்ளைகள்... அழுகி உருக்குலைந்த உடலுடன் வாழ்ந்துவந்ததால் அதிர்ச்சி
அமெரிக்காவில் வீடு ஒன்றிற்கு சென்ற பொலிசார், அங்கு அநாதரவாக விடப்பட்டிருந்த மூன்று பிள்ளைகளுடன், அழுகி உருக்குலைந்த ஒரு உடலையும் கண்டுபிடித்துள்ள விடயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெக்சாஸிலுள்ள வீடு ஒன்றை சோதனையிட்ட பொலிசார், அங்கு பெற்றோர் இல்லாமல் அநாதரவாக விடப்பட்ட முறையே 7, 10 மற்றும் 15 வயதுடைய மூன்று பிள்ளைகள் தனிமையில் வாழ்ந்துவருவதைக் கண்டுபிடித்துள்ளனர்.
அந்த பிள்ளைகளில் மூத்தவளான பெண் பிள்ளை, பெற்றோர் தங்களுடன் இல்லாத நிலையிலும், தன் தம்பி தங்கைகளை அக்கறையுடன் கவனித்துக்கொண்டிருந்திருக்கிறாள்.
அந்த பிள்ளைகளின் பெற்றோர் நீண்ட நாட்களுக்கு முன் அவர்களை கைவிட்டுச் சென்றுள்ளதுபோல் தோன்றுகிறது.
இதற்கிடையில், அதே வீட்டில் ஒரு பிள்ளை இறந்து, அதன் உடல் அழுகி, எலும்புக்கூடாகி கிடப்பதைக் கண்ட பொலிசார் அதிர்ச்சியடைந்துள்ளனர். அந்த வீட்டில் ஒரு பிள்ளை இறந்து கிடந்த நிலையில், மற்ற பிள்ளைகள் அதே வீட்டில் மோசமான நிலையில் வாழ்ந்துவந்துள்ளார்கள்.
தற்போது, பிள்ளைகள் மீட்கப்பட்டு அரசின் பொறுப்பில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
அவர்களது பெற்றோர் யார், அவர்கள் எங்கு சென்றார்கள், அவர்கள் ஏன் பிள்ளைகளை அநாதரவாக விட்டுச் சென்றார்கள் என்பதுபோன்ற கேள்விகளுக்கு தற்போது விடை இல்லை.
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.