காய்ச்சலுக்கான ஊசிக்கு பதிலாக சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி: குமுறும் பெற்றோர்
அமெரிக்காவில் காய்ச்சலுக்கான வருடாந்தர ஊசிக்கு பதிலாக சிறுவர்கள் இருவருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளதாக இண்டியானா மாகாண பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இண்டியானா மாகாணத்தின் Walgreens பகுதியில் அமைந்துள்ள மருந்தகத்தில் இருந்தே 4 மற்றும் 5 வயதுடைய சிறுவர்கள் இருவருக்கு கொரோனா தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் புகார் தெரிவித்துள்ள Alexandra மற்றும் Joshua Price தம்பதி, காய்ச்சலுக்கான வருடாந்தர தடுப்பூசி போட்டுக்கொள்ள தங்கள் இரு பிள்ளைகள் உட்பட நால்வரும் சென்றதாகவும், ஆனால் குளறுபடி காரணமாக தங்களது பிள்ளைகள் இருவருக்கும் காய்ச்சலுக்கான ஊசிக்கு பதிலாக கொரோனா தடுப்புசி அளித்ததாக தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் 12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இதுவரை கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில், பெரியவர்களுக்கு அளிக்கப்படும் பைசர் தடுப்பூசி டோஸ் முழுமையாக தங்கள் பிள்ளைகள் இருவருக்கும் அளிக்கப்பட்டுள்ளது என்றனர்.
இந்த விவகாரம் தொடர்பில் Price குடும்பத்தின் சட்டத்தரணி ஒருவர் ஆதாரங்களுடன் தகவல் வெளியிட்டுள்ளார். மேலும் சிறார்கள் இருவரையும் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தியதாகவும், அவர்களுக்கு தடுப்பூசியால் பாதிப்பு கண்டறியப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
திங்களன்று இரவு வரையிலும், இந்த விவகாரம் தொடர்பாக Price குடும்பத்தினர் நீதிமன்றத்தை நாடவில்லை என்றே தெரிய வந்துள்ளது.
ஆனால் அதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவே, அவர்களின் சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.