ஆய்வகத்திலிருந்து கொரோனா கசிந்தது குறித்து ஆராய சென்றவர்களுக்கு ஒத்துழைக்கவில்லை... குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள சீனா
வுஹான் ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் கசிந்தது குறித்து ஆராய சென்றவர்களுக்கு சீனா ஒத்துழைக்கவில்லை என்ற உலக சுகாதார அமைப்பின் குற்றச்சாட்டுகளை சீனா மறுத்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் தலைவரான டெட்ராஸ் அதானம், ஆய்வாளர்கள் கொரோனா வுஹான் ஆய்வகத்திலிருந்து பரவியதா என்பது குறித்து ஆராய்வதற்காக சீனா சென்றபோது, அசல் தரவுகள் அவர்களுக்கு வழங்கப்படவில்லை என்று கூறியிருந்தார்.
நானும் ஆய்வகத்தில் வேலை செய்தவன்தான், ஆய்வகத்தில் தவறுகள் நடப்பது சகஜம், ஆகவே ஆய்வகத்தில் என்ன நடந்தது என்பதை வெளிப்படையாக சொல்லுங்கள் என்று கூறிய அதானம், கொரோனா வுஹான் ஆய்வகத்திலிருந்து தவறுதலாககூட வெளியேறியிருக்கலாம், ஆகவே உண்மையைச் சொல்லுங்கள் என சீனாவை கேள்விகளால் துளைத்தெடுத்தார்.
அறிவியலாளர்கள் கொரோனா எங்கிருந்து உருவானது என்பதைக் கண்டறியும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் நிலையில், சீனா இன்னும் அதிக வெளிப்படைத்தன்மையுடன் இருக்கவேண்டும் என உலக சுகாதார அமைப்பு சீனாவை வலியுறுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சீனாவுக்கு வந்த ஆய்வாளர்கள் அசல் தரவுகளைப் பார்க்க அனுமதிக்கப்பட்டார்கள் என்று கூறியுள்ள சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் Zhao Lijian, சில தகவல்கள் மட்டும் தனியுரிமை காரணமாக நாட்டிலிருந்து வெளியே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படாது என்றார்.
மேலும், சீனாவிலுள்ள வுகான் ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் தப்பியிருக்கலாம் என்ற கருத்தை தவிர்க்குமாறு ஆரம்பத்தில் தங்களுக்கு அழுத்தம் தரப்பட்டது என்றும் கூறியிருந்தார் அதானம். அந்த கருத்தையும் சீனா நிராகரித்துள்ளது.