சீனா எடுத்துள்ள அந்த முடிவு... ஜேர்மன் கார் உற்பத்தி மொத்தமாக ஸ்தம்பிக்கும்
அரிய மண் தாதுக்கள் மீதான சீனாவின் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் விரைவில் கார் உற்பத்தியை மொத்தமாக ஸ்தம்பிக்க செய்யும் என ஜேர்மனியின் தொழில்துறை குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சீன அதிகாரிகளுடன்
ஏற்றுமதி உரிமங்களை வழங்குவதில் தாமதம், அத்துடன் செல்லுபடியாகும் உரிமங்களுடன் ஏற்றுமதிகளின் சுங்க அனுமதியில் தாமதம், கார் உற்பத்தியை சீராக இயங்கச் செய்வதற்குத் தேவையான முக்கியமான கூறுகளை சப்ளையர்களால் உற்பத்தி செய்ய முடியவில்லை உள்ளிட்ட காரணங்களையும் தொழில்துறை குழு தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், இந்தியா, ஜப்பான் மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த தூதர்கள், வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் பிற நிர்வாகிகள், அரிய தாதுக்கள் ஏற்றுமதிகளுக்கு விரைவான ஒப்புதலை வழங்குவதற்காக சீன அதிகாரிகளுடன் அவசரமாக சந்திப்புகளை நாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் இந்த அரிய தாதுக்கள் விவகாரத்தில் சீனாவிற்கு மாற்று வேறு இல்லை என்பதே அதன் பலமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், அமெரிக்காவிலும் இந்தியாவிலும் உள்ள ஜெனரல் மோட்டார்ஸ், டொயோட்டா, வோக்ஸ்வாகன், ஹூண்டாய் மற்றும் பிற வாகன உற்பத்தியாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வர்த்தகக் குழுக்களும், அரிய மண் தாதுக்கள் தேவைப்படும் முக்கியமான கூறுகளை சப்ளையர்கள் உற்பத்தி செய்ய முடியாவிட்டால், கார் தொழிற்சாலைகள் வாரங்களுக்குள் மூடப்படலாம் என்று எச்சரித்துள்ளன.
கடுமையான நடைமுறை
இதனிடையே, வோக்ஸ்வாகனுக்கு விநியோகம் செய்பவர்கள் உட்பட ஒரு சிலருக்கு அரிய மண் தாதுக்களை விநியோகம் செய்ய சீனா அனுமதிகளை வழங்கியுள்ளது. ஆனால் சீரான உற்பத்தியை முன்னெடுக்க இவை போதுமானதாக இல்லை என்றே கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஏற்றுமதி உரிமங்களை வழங்குவதில் சீனாவின் மிகவும் கடுமையான நடைமுறைகளால் சப்ளையர்கள் சிக்கித் தவிப்பதாக ஜேர்மன் வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பாளரான போஷ் கடந்த வாரம் கூறியது.
நிலைமை விரைவாக மாறாவிட்டால், உற்பத்தி தாமதங்கள் மற்றும் உற்பத்தி பாதிப்புகளை கூட இனி தடுக்க முடியாது என்று ஆட்டோ லாபி VDA தலைவர் முல்லர் எச்சரித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |