பொம்மை விற்பனை மூலம் ஒரே நாளில் ரூ.13,700 கோடி சம்பாதித்த நபர்
வாங் நிங் என்ற நபர் பொம்மை விற்பனை மூலம் ஒரே நாளில் ரூ.13,700 கோடி சம்பாதித்துள்ளார்.
லாபுபு பொம்மை
ஹாங்காங்கை சேர்ந்த கேசிங் லுங் என்பவர் கடந்த 2015 ஆம் ஆண்டு 'The Monsters' என்ற புத்தகத்தை வெளியிட்டார்.
இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ள தனித்துவமான முயல் காதுகளை கொண்ட லாபுபு கதாப்பாத்திரம், உலகளவில் பலரின் கவனத்தை ஈர்த்தது.
இதனையடுத்து, சீனாவை சேர்ந்த வாங் நிங் என்பவரின், பாப் மார்ட் இன்டர்நேஷனல் என்ற பொம்மை தயாரிக்கும் நிறுவனத்துடன் இனைந்து, கேசிங் லுங் இந்தபொம்மையை( labubu doll) அறிமுகப்படுத்தினார்.
லாபுபு பொம்மை இன்றைய இளம் தலைமுறையிடம் பெரும் வரவேற்பை பெற்றது. பிரபல பாடகி ரிஹானா உள்ளிட்ட பலரும் இந்த பொம்மைக்கு ரசிகர்களாக மாறினர்.
ஒரே நாளில் ரூ.13,700 கோடி
அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையே வர்த்தக போர் நிலவி வந்த சூழலிலும், அமெரிக்கா மற்றும் சீனாவில் இந்த பொம்மையை வாங்க பலரும் மணிக்கணக்கில் வரிசையில் காத்திருந்தனர்.
இதன் மூலம், வாங் நிங் ஒரே நாளில் 1.6 பில்லியன் டொலர்(இந்திய மதிப்பில் ரூ.13,700 கோடி) சம்பாதித்து உள்ளார்.
வாங் நிங்கின் சொத்து மதிப்பு 18.3 பில்லியன் டொலர்(இந்திய மதிப்பில் ரூ1.54 லட்சம் கோடி) என போர்ப்ஸ் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |