மூன்று குழந்தை பெற்றால் 57 ஆயிரம் ரூபாய் இலவசம்! எங்கே தெரியுமா? அசர வைக்கும் அரசின் திட்டம்
சீனாவில் மூன்று குழந்தை பெற்று கொண்டால் அவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பல அதிரடி திட்டங்களை அரசு அறிவித்துள்ளது.
உலகிலே அதிக மக்கள் தொகை நாடாக சீனா விளங்குகிறது. ஆனால் முதல் முறையாக 50 ஆண்டுகளுக்கு பிறகு சீனாவில் மக்கள் தொகை குறைத்துள்ளது. இப்படியே சென்றால் சீனாவின் தற்போதைய மக்கள் தொகையை இந்தியா முந்திவிடும் என்று கூறப்படுகிறது.
எனவே அந்நாட்டு அரசு மக்களிடம் மூன்றாவது குழந்தை பெற்று கொள்ளலாம் என்ற கொள்கையை அறிமுகப்படுத்தியது. ஆனால் சீனாவின் பல்வேறு நகரங்களில் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை நடத்தவே பணம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
இதனால் மூன்றாவது குழந்தை பெற்று கொள்ளும் வாய்ப்பு மிகவும் குறைவு என்பதால் சீனா சூப்பர் திட்டங்களை அறிவித்துள்ளது.
கான்சே மாகாணத்தில் உள்ள லின்ஸ் கவுண்டி என்ற நகரத்தில் தம்பதிகள் மூன்றாவது குழந்தை பெற்று கொண்டால் அவர்களுக்கு 777 அமெரிக்க டாலர் உதவியாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மதிப்பில் சுமார் 57ஆயிரம் ரூபாய் அளிக்கப்படும். வீடு வாங்க 30,000 யுவான் மானியமாக தருவதாகவும் தெரிவித்துள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் மக்கள் தொகையை அதிகமாக்கும் நோக்கத்தில் சீனா அரசு இந்த திட்டத்தை திட்டியுள்ளதாக கூறப்படுகிறது.