பிரித்தானியாவுக்குள் ஊடுருவும் சீன உளவாளிகள்: அம்பலமாகும் பகீர் தகவல்
ஹொங்ஹொங்கில் வசிக்கும் மக்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள விசா திட்டம் ஊடாக சீன உளவாளிகள் பிரித்தானியாவுக்குள் நுழையும் வாய்ப்பு மிக அதிகம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை குறித்த வாய்ப்பை பயன்படுத்தி ஹொங்ஹொங் மக்கள் 34,000 பேர்கள் குடியுரிமை கேட்டு விண்ணப்பித்துள்ளதாக உத்தியோகப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
இவர்களில் சீன உளவாளிகள் கலந்திருக்க வாய்ப்புகள் மிக அதிகம் என பிரித்தானிய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் விண்ணப்பதாரர்கள் தொடர்பில் கடுமையான பின்னணி சோதனைகள் முன்னெடுக்கப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
குறித்த திட்டத்தின் கீழ் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் ஹொங்ஹொங்கில் இருந்து பிரித்தானியாவுக்கு குடியேறலாம் என உள்விவகார அலுவலகம் கூறுகிறது, ஆனால் பெரும்பாலும் இந்த எண்ணிக்கை 322,400 என்றே கட்டுப்படுத்தப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
கடந்த ஜனவரியில் அமுலுக்கு கொண்டுவந்த இந்த புதிய திட்டத்தின் கீழ் முதல் இரண்டு மாதங்களில் மட்டும் 34,000 ஹொங்ஹொங் மக்கள் விசா கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.
குறித்த திட்டத்தால் வரி வருவாய் தொடர்பில் பிரித்தானியாவுக்கு 5 ஆண்டுகளில் 2.4 பில்லியன் முதல் 2.9 பில்லியன் பவுண்டுகள் வரையில் பிரித்தானியா பொருளாதார பயனை அடையும் என்றே நம்பப்படுகிறது.
இந்த விசா திட்டமானது 5 ஆண்டுகள் எனவும், அதன் பின்னர் விருப்பமானவர்களுக்கு நிரந்தரமாக பிரித்தானியாவில் குடியேறும் வாய்ப்புகளும் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.