செல்லப்பிராணிகளின் ஒலியை மொழிபெயர்க்கும் AI கருவி
AI தொழில்நுட்பம் ஒவ்வொரு துறையிலும் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது.
தற்போது செல்லப்பிராணிகள் பேசுவதை மனிதர்கள் புரிந்து கொள்ளும் உதவும் அளவிற்கு AI கருவிகள் வந்து விட்டன.
செல்லப்பிராணிகளின் ஒலியை மொழிபெயர்க்கும் AI
தங்களது வீட்டில் நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள் அவைகள் என்ன பேசுகின்ற என்பதை புரிந்து கொள்ளும் வகையில் சீனாவை சேர்ந்த Meng Xiaoyi என்ற நிறுவனம் AI கழுத்து பட்டை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
பெட்டிசாட் (PettiChat) என அழைக்கப்படும் இந்த கழுத்து பட்டையானது, அலிபாபா கிளவுடின் (Alibaba Cloud) க்வென் ஏஐ (Qwen AI) மாதிரியின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

கால்நடை மருத்துவர்கள் மற்றும் தன்னார்வலர்களின் உதவியுடன் சேகரிக்கப்பட்ட 15 லட்சத்திற்கும் மேற்பட்ட நிஜ உலக செல்லப்பிராணிகளின் ஒலி மாதிரிகள் மற்றும் 3,200 மணிநேரக் குறிப்புரைக்கப்பட்ட செல்லப்பிராணிகளின் காணொளித் தரவுகளைக் கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
ரோல்ஸ் ராய்ஸுக்கு போட்டியாக தானாக பார்க்கிங் செய்யும் கார்: சீனாவில் கலக்கும் Maextro-யின் விலை எவ்வளவு?
இதனை உங்கள் செல்லப்பிராணியின் கழுத்தில் மாட்டியிருக்கும் போது, அதன் ஒலிகள், உணர்ச்சிகள் மற்றும் நடத்தையை அதிகத் துல்லியத்துடன் அடையாளம் கண்டு, AI உதவியுடன் எழுத்துக்களாக மாற்றி இந்த AI தொடர்புடைய செல்போன் செயலிக்கு அனுப்பும்.
🔥🚨LATEST: Chinese tech company Meng Xiaoyi claims they just created a pet translator with 95% accuracy that transforms the sounds and behavior of your pets into human speech for the price of $118. They currently have over 10,000 preorders for this product. pic.twitter.com/6qCeVEWWX8
— Dom Lucre | Breaker of Narratives (@dom_lucre) May 24, 2026
உதாரணமாக உங்கள் பூனை மேலே பார்த்து மியாவ் என கத்தும் போது அது "நான் விளையாட வேண்டும்" எனக்கூறுவதாக மொழி பெயர்த்து அனுப்பும்.
நாய் குறைக்கும் போது "அது எனக்கு பசிக்கிறது" என கூறுவதாக மொழிபெயர்த்து அனுப்பும். நீங்கள், “சும்மா இரு, அமைதியாக இரு,” என்பது போன்ற வார்த்தைகளை கூறும் போது அந்தப் பட்டை, குரைப்பு அல்லது மியாவ் ஒலிகள் மூலம் அந்தச் செய்தியை செல்லப்பிராணிக்கு தெரிவிக்கும்.

27.2 கிராம் எடை கொண்ட இந்த கழுத்து பட்டையில் GPS கண்காணிப்பு வசதியும் உள்ளதால் உங்கள் செல்லப்பிராணி எங்கே இருக்கிறது என்பதை நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
ஒரு மணி நேரம் சார்ஜ் செய்தால் 1,000 க்கும் மேற்பட்ட “வாக்கிய மொழிபெயர்ப்புகளை” செய்ய முடியும்.
இந்த பட்டை மே 30 ஆம் திகதி விற்பனைக்கு வருவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது வரை 10,000க்கும் அதிகமானோர் இதனை வாங்க முன்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பட்டைக்கு 799 யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.11,000) விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் துல்லியத்தன்மை பயன்படுத்தும் போதே தெரியும் சமூகவலைத்தளங்களில் பயனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |