இந்தியாவிற்கு கொடுத்த வாக்குறுதியை மீறிய சீனா! எல்லையில் மீண்டும் பதற்றம்
இந்தியாவுக்கு கொடுத்த வாக்கை மீறி எல்லையோர பகுதிகளில் சீனா மீண்டும் படைகளை குவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
லடாக் பகுதியில் கடந்த ஆண்டு இந்திய எல்லைக்குள் சீன படையினர் அத்துமீறி நுழைந்தனர். இதனால் சீன ராணுவத்தினருக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் பயங்கர மோதல் ஏற்பட்டது.
இதில் 20க்கும் மேற்பட்ட இந்திய இராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இருநாடுகளுக்குள் ஏற்பட்ட மோதலை சரிசெய்ய தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது.
இதன்மூலம் சமரசம் ஏற்பட்டு எல்லையோர பகுதிகளில் இருந்து இருநாடுகளும் படைகளை விலக்கி கொள்ள முடிவு செய்தது. அதுமட்டும் இல்லாமல் சீனா இது போன்ற அத்துமீறல்களில் இனி ஈடுபடமாட்டோம் என்று வாக்குறுதி அளித்தது.
இந்நிலையில் 17 மாதங்களுக்கு பிறகு இந்திய சீன எல்லை பகுதிகளில் ராணுவ வீரர்கள் தங்குவதற்கான கட்டமைப்புகளை சீன ராணுவம் உருவாக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் எல்லை பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.