கொங்கு நாட்டு ஸ்பெஷல் சிக்கன் சிந்தாமணி.., இலகுவாக எப்படி செய்வது?
சிக்கன் சிந்தாமணி தோசை, இட்லி, சப்பாத்தி , பூரி, சாப்பாடு என அனைத்திற்கும் அட்டகாசமாக இருக்கும்.
அந்தவகையில், சுவையான கொங்கு நாட்டு ஸ்பெஷல் சிக்கன் சிந்தாமணி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- சோம்பு- ¼ ஸ்பூன்
- நாட்டு கோழி- ½ kg
- சின்ன வெங்காயம்- 1 கைப்பிடி
- நல்லெண்ணெய்- 4 ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- இஞ்சி பூண்டு பேஸ்ட்- 2 ஸ்பூன்
- கறிவேப்பிலை- 1 கொத்து
- காய்ந்த மிளகாய்- 10
- எலுமிச்சை- ¼ ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் ஒரு டீஸ்பூன் சோம்பு, சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
பின் இதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போன பிறகு விதை நீக்கிய காய்ந்த மிளகாய்களை சேர்த்து கிளறவும்.
அடுத்து இதில் கழுவி வைத்த நாட்டுக்கோழி மற்றும் உப்பு சேர்த்து மிதமான தீயில் நன்கு வேகவைக்கவும்.
சிக்கன் நன்கு வெந்து வந்ததும் இறுதியில் கொத்தமல்லி தூவி , எலுமிச்சை சாறு சேர்த்து கலந்தால் சுவையான சிக்கன் சிந்தாமணி தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |