தமிழகத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து
தமிழகத்தில் இந்தியாவின் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் பயணித்த இராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிற்பகல் 12:30 மணியளவில், குன்னூர், காட்டேரி நஞ்சப்பா சத்திரம் பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளாகி தீ பிடித்து எரிந்துள்ளது.
சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து வெலிங்டனுக்கு இந்திய விமானப்படையின் Mi-17V5 ஹெலிகாப்டர் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
ஹெலிகாப்டரில் உயர் அதிகாரிகள் உட்பட 14 பேர் பயணித்ததாகவும், தற்போது வரை 4 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்க்ள வெளியாகியுள்ளது.
அதேசமயம், இராணுவத்துக்கு உதவுவதற்காக கோவையில் இருந்து டாக்டர்கள் குழு வெலிங்டன் விரைந்துள்ளது.
Indian army helicopter crashed in #Coonoor, TamilNadu carrying a senior defence official. pic.twitter.com/aF1V8zOuju
— மு.குணசேகரன் Gunasekaran (@GunasekaranMu) December 8, 2021
இதனிடையே, பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட மூவர் நீலகிரி மாவட்டம் வெலிங்டன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Army helicopter crashed near Coonoor, TN pic.twitter.com/gUlhb4ZWet
— மு.குணசேகரன் Gunasekaran (@GunasekaranMu) December 8, 2021
தளபதி பிபின் ராவத்-ன் நிலை குறித்து தற்போது வரை எந்தவித தகவலும் வெளியாகவில்லை. ஹெலிகாப்டரில் பிபின் ராவத்தின் மனைவியும் உடன் பயணித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
An IAF Mi-17V5 helicopter, with CDS Gen Bipin Rawat on board, met with an accident today near Coonoor, Tamil Nadu.
— Indian Air Force (@IAF_MCC) December 8, 2021
An Inquiry has been ordered to ascertain the cause of the accident.