அபாயங்களை அறிந்தே கையெழுத்திட்டனர்! ஐபிஎல் தொடர் முடிந்த பின்னர்... நட்சத்திர வீரர் வலியுறுத்தல்
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் முடிந்த பிறகு தனி விமான நாடு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவுஸ்திரேலிய நட்சத்திர வீரர் கிறிஸ் லின் வலியுறுத்தியுள்ளார்.
மும்பை இந்தின்ஸ் அணிக்காக விளையாடி வருபவர் அவுஸ்திரேலியாவின் கிறிஸ் லின். அவர் கூறுகையில், நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடருக்குப் பிறகு அவுஸ்திரேலிய வீரர்களை தனி விமானம் மூலம் அழைத்துச்செல்ல ஏற்பாடு செய்ய முடியுமா? என நான் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் கேட்டேன்.
எங்களை விட மிக கடுமையான சூழலில் மக்கள் இருப்பதை நான் அறிவேன். நாங்கள் மிகக் கடுமையான உயிர் பாதுகாப்பு வளையத்தில் இருந்தே வருகிறோம்.
அடுத்த வாரம் தடுப்பூசி போட்டுக்கொள்ள இருக்கிறோம். எனவே, நாங்கள் தனி விமானத்தில் நாடு திரும்புவதற்கு அரசு அனுமதி அளிக்கும் என நம்புகிறோம்.
அபாயங்களை அறிந்தே வீரர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர் என கூறியுள்ளார்.