யூரோ கால்பந்து போட்டியில் காத்திருந்த அதிர்ச்சி! நிலை தடுமாறி கீழே விழுந்த கிறிஸ்டியன் எரிக்சன்: ரத்து செய்யப்பட்ட போட்டி
யூரோ கால்பந்து தொடரில், டென்மார்க் வீரர் போட்டியின் போது நிலை தடுமாறி கீழே விழுந்ததால், அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
உலக கோப்பை தொடருக்கு அடுத்து கால்பந்து உலகின் மிகப்பெரிய திருவிழாவாக யூரோ கோப்பை போட்டி பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான இத்தொடர் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
தற்போது மீண்டும் கொரோனா பரவலுக்கு இடையே நேற்று முன் தினம் துவங்கியது. இந்த தொடர் வரும் ஜூலை 11-ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. மொத்தம் 24 அணிகள் ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, லீக் முறையில் போட்டிகள் நடக்கின்றன.
முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடம் பெறும் 12 அணிகள், 6 பிரிவுகளில் சிறந்த 4 அணிகள் என மொத்தம் 16 அணிகள் 'ரவுண்டு-16' சுற்றுக்கு முன்னேறும். பைனல் வரும் ஜூலை 11-ஆம் திகதி லண்டன், வெம்ளே மைதானத்தில் நடக்கவுள்ளது.
இந்நிலையில், இன்று டென்மார்க் மற்றும் பின்லாந்து அணிகளுக்கிடையேயான போட்டி நடைபெற்றது. பரபரப்பான இப்போட்டியின் போது, திடீரென்று டென்மார்க் வீரர் Christian Eriksen நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
இதைக் கண்ட சக வீரர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். அதன் பின் அவர் உடனடியாக ஸ்ட்ரச்சர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரின் உடல் நிலை என்ன ஆனது என்பது குறித்து இன்னும் தெரியவில்லை. இதற்கிடையில், இந்த போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.