ஜேர்மனியில் களைகட்டும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்! ஆனால்.. இவர்களுக்கு அனுமதியில்லை
ஜேர்மனியில் கொரோனா 4வது அலை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் அங்கு கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கோலாகலமாக தொடங்கியுள்ளது.
ஜேர்மனியில் கொரோனா 4வது அலை தீவிரமாக பரவி வருகின்றது. இதனால் அந்நாட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் டிசம்பர் மாதம் 25ஆம் திகதி அன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. எனினும் பல்வேறு நாடுகளில் இப்போழுதே கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான கொண்டாட்டங்கள் தொடங்கப்பட்டுவிட்டது.
அந்த வகையில் ஜேர்மனி நாட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கோலாகலமாக தொடங்கியுள்ளது. அப்போது அங்கு வருகை தந்திருந்த சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் பரிசளித்து மகிழ்ந்தனர்.
ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி உற்சாகமாக நடைபெற்று வரும் நிலையில் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் மட்டுமே இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அது மட்டும் இல்லாமல் தடுப்பூசி செலுத்தாதவர்கள் கிருஸ்துமஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதியில்லை என்று திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளது.