மன்னிப்பு கேட்காவிட்டால் கல்லடி உறுதி! நடிகர் விஜய் சேதுபதிக்கு வந்த கொலை மிரட்டல்
நடிகர் விஜய் சேதுபதிக்கு பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு படப்பிடிப்புக்காக நடிகர் விஜய் சேதுபதி பெங்களூர் சென்று இருந்தார். அப்போது விமான நிலையத்தில் விஜய் சேதுபதியை மர்ம நபர் ஒருவர் எட்டி உதைத்த சம்பவம் சோசியல் மீடியா முழுவதும் தீயாய் பரவியது.
இதையடுத்து பொலிசார் அந்த மர்ம நபரை கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர் பெயர் மகா காந்தி என்பது தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து விஜய் சேதுபதி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் மகாகாந்தியின் விளக்கம் வேறு மாதிரியாக இருந்தது.
விஜய் சேதுபதி தேசிய விருது வாங்கியதற்காக அவருக்கு வாழ்த்து சொன்ன பிறகு குரு பூஜையில் கலந்து கொண்டீர்களா என்று கேட்டுள்ளார். அதற்கு விஜய் சேதுபதி யார் குரு என்று கேட்டிருக்கிறார்.
அந்த சமயத்தில் வாக்குவாதம் முற்றியதால் விஜய் சேதுபதியுடன் இருந்தவர்கள் தன்னை தாக்கியதாகவும் தான் திருப்பி தாக்கியதாகவும் கூறியுள்ளார்.
விஜய்சேதுபதி இன்னும் கல்லடிபடவில்லையே என்பவர்கள் யாராக இருந்தாலும் உங்கள் பாதுகாப்போடு பொது தளத்துக்கு அழைத்து வந்து தகவல் தாருங்கள் மன்னிப்பு கேட்காமல் தேவர் தொண்டர்கள் கண்ணில் பட்டால் கல்லடி உறுதி @VijaySethuOffl pic.twitter.com/OIkgoHTwRx
— AM சௌத்ரிதேவர் film producer (@chowdryam) November 12, 2021
இந்நிலையில் தம்மை தாக்கியவர் மீது விஜய் சேதுபதி காவல் நிலையத்தில் புகார் அளிக்காதது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
முத்துராமலிங்கத் தேவர் வாழ்க்கையை திரைப்படமாக தயாரித்து வரும் தயாரிப்பாளர் ஏ.எம்.செளத்ரி என்பவர் இன்னும் இரண்டு நாட்களில் விஜய் சேதுபதி மன்னிப்பு கேட்கவில்லை என்றால் கல்லால் அடித்து கொலை செய்வதாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.