சீனாவில் குழந்தைகளுக்கு செலுத்தப்படும் கோழி ரத்த ஊசி! எதற்கு தெரியுமா? வெளியான வினோத காரணம்
சீனாவில் குழந்தைகள் சிறந்த ஆற்றல்மிக்கவர்களாக வளர வேண்டும் என்பதற்காக அவரது பெற்றோர்கள் கோழி இரத்தத்தை ஊசியின் மூலம் செலுத்தி வருகின்றனர்.
தங்களது குழந்தைகள் மற்ற குழந்தைகளை விட திறமையாக வளர வேண்டும் என்பது பலர் பெற்றோர்களின் ஆசை. அதை சில பெற்றோர்கள் குழந்தைகளிடம் வெளிப்படையாக சொல்வதுண்டு.
இந்நிலையில் சீன பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் எல்லா துறையிலும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக புதிய முறையை கையில் எடுத்துள்ளனர். அதாவது கோழி மூலமாக உருவான சிக்கன் வளர்ப்பு முறையை பின்பற்றி வருகின்றனர்.
உலகம் முழுவதும் இந்த முறை பெற்றோர்களின் முட்டாள்தனமாக கருதப்படுகின்றது. ஆனால் சீனா மக்கள் இதை பெரிதும் போற்றிகின்றனர். கோழியின் இரத்தத்தை எடுத்து ஊசி மூலம் குழந்தைகளுக்கு செலுத்தப்படுவதே சிக்கன் வளர்ப்பு முறை எனப்படும்.
இதனால் கருவுறாமை, புற்றுநோய் மற்றும் வழுக்கை, உள்ளிட்ட பல உடல்நலப் பிரச்சினைகள் குணமாவதாக கருதுகின்றனர். இந்த கோழி இரத்தத்தில் உள்ள ஸ்டீராய்டுகள் குழந்தைகளை ஹைபராக்டிவிட்டியாக மாற்றி கல்வியிலும், விளையாட்டுகளிலும் சிறப்பாகச் செயல்பட உதவும்.
இந்த முறை சீனாவில் மிகவும் பிரபலமாகி வருகின்றது. சீனாவில் உள்ள பெய்ஜிங், ஷாங்காய் போன்ற நகரங்களில் இந்த முறை நடைமுறையில் உள்ளது.