பள்ளி வளாகத்தில் வைத்து 5-ஆம் வகுப்பு மாணவி சீரழிப்பு! வைரலாக பரவிய வீடியோ
இந்திய மாநிலம் ஹரியானாவில் காலியாக இருந்த பள்ளியில் 10 வயது சிறுமியை 8 சிறுவர்கள் உட்பட 9 பேர் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் மே 24 அன்று ஹரியானாவில் ரேவாரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்ததாக சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தன்று சிறுமி தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு கும்பலால் கடத்தப்பட்டுள்ளார். அருகில் உள்ள ஒரு பள்ளி கட்டிடத்தில் வைத்து சிறுமி ஒருவரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்.
இதனை 18 வயது சிறுவன் தனது போனில் வீடியோவாக படம்பிடித்துள்ளார். அந்த வீடியோவை மற்ற இரண்டு சிறுவர்கள் மற்றவர்களுக்கு வாட்ஸாப்பில் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோ அந்த கிராமத்தில் உள்ள பலருக்கு சென்றடைந்த நிலையில் வீடியோ வைரலாகியுள்ளது. அதன் பிறகே சிறுமியின் பெற்றோருக்கு நடந்த விடயம் தெரியவந்துள்ளது. அதுவரை சிறுமியும் பயத்தில் தனக்கு நடந்த கொடுமையை யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார்.
பிறகு குடும்பத்தினர் பொலிஸில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, 9 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட 9 பேரில் ஐந்து பேர் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு நெருங்கிய உறவினர்கள் என்று கூறப்படுகிறது.
மேலும், இந்த குற்றச்சாட்டுக்கு உள்ளான சிறார்களில் ஐந்து பேர் 10 முதல் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏர்படுத்தியுள்ளது