போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு - 3 கி.மீ தூரம் மாரத்தான் ஓடிய முதல்வர் விஜய்
போதைப்பொருள் எதிர்ப்பு மாரத்தான் ஓட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் விஜய் 3 கி.மீ தூரம் ஓடியுள்ளார்.
மாரத்தான் ஓடிய முதல்வர் விஜய்
சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பட்டு ஆணையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட 'Start Run Stop Drugs' போதைப்பொருள் எதிர்ப்பு மாரத்தான் ஓட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்து, அதில் தானும் பங்கேற்றார்.

சென்னை காமராஜர் சாலையில் அண்ணா நினைவிடம் அருகே தொடங்கிய இந்த நிகழ்வில், அங்கிருந்த பலகையில் Sportsai edu Drugsai vidu என எழுதி கையெழுத்திட்டுள்ளார்.

போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை முதல்வர் விஜய் வாசிக்க, அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

முதல்வர் விஜய் உடன் அமைச்சர்கள் மரிய வில்சன், ஆனந்த், வெங்கட்ரமணன், ஆதவ் அர்ஜுனா, தலைமை செயலாளர் மற்றும் பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு ஓடினர்.
அதைத்தொடர்ந்து போதைப்பொருள் ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்ட 15 காவல்துறையினருக்கு முதல்வர் விஜய் பதக்கங்களை அறிவித்தார்.

இதன் பின்னர் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "காலை 5 மணிக்கு எழுந்து, 6.10 க்கு வந்து, 6.15 க்கு மாரத்தானில் ஓடத் தொடங்கி 3 கி.மீ. தூரம் வரை ஓடினார் முதல்வர் விஜய்.
போதைப்பொருள் ஒழிப்புக்கான விழிப்புணர்வை வெறும் பேச்சில் மட்டும் அல்லாமல், செயலிலும் காட்டியுள்ளார். நம் முதல்வரை போலவே தமிழ்நாடும் ஆரோக்கியமாக மாறப்போகிறது. இப்படி 3 கி.மீ தூரம் மாரத்தான் ஓடிய ஒரு யூத் முதல்வர், இந்தியாவில் எங்குமே கிடையாது. " என பேசியுள்ளார்.
போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு
இதன் பின்னர் முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள பதிவில், "இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும், குற்றங்களைத் தடுக்கவும், போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கவும், போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகும்.
இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும், குற்றங்களைத் தடுக்கவும், போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கவும், போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகும்.
— CMOTamilNadu (@CMOTamilnadu) June 26, 2026
கல்வி, விளையாட்டு, திறன் மேம்பாடு போன்ற ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் இளைஞர்களை… pic.twitter.com/AONKH6bnLK
கல்வி, விளையாட்டு, திறன் மேம்பாடு போன்ற ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் இளைஞர்களை ஈடுபடுத்துவதன் மூலமாகவும், கடுமையான சட்ட நடவடிக்கைகள் மற்றும் சமூகத்தின் கூட்டு முயற்சி மூலமாகவும் போதைப்பொருட்களை ஒழித்து, வலிமையான சமுதாயத்தைப் படைக்க முடியும்.
போதைப்பொருட்கள் தொடர்பான குற்றங்களைத் தடுத்திட தமிழ்நாடு அரசு எடுத்துவரும் பல்வேறு முன்னெடுப்புகளுக்கு அனைவரும் துணை நின்று, போதைப்பொருள் இல்லாத, பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான தமிழ்நாட்டை உருவாக்கிட இந்நாளில் உறுதியேற்போம். Start Run, Stop Drugs" என கூறியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |