தித்திக்கும் சுவையில் தேங்காய் பால் புட்டிங்.., எப்படி செய்வது?
புடிங் என்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு இனிப்பு உணவாகும்.
அந்தவகையில், தித்திக்கும் சுவையில் தேங்காய் பால் புட்டிங் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- தண்ணீர்- 1 கப்
- அகர் அகர் பொடி- 2 ஸ்பூன்
- சர்க்கரை- 1 கப்
- தேங்காய்- 1 கப்
- ஏலக்காய் தூள்- ½ ஸ்பூன்
- பாதாம்- 5
- முந்திரி- 5
- பிஸ்தா- 5
செய்முறை
முதலில் தேங்காய்யை நன்கு துருவி தண்ணீர் சேர்த்து அரைத்து அதன் பாலை மட்டும் வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து அதில் அகர் அகர் பொடியை சேர்த்து கரைத்துக்கொள்ளவும்.
அடுத்து இவற்றை அடுப்பில் மிதமான தீயில் வைத்து கெட்டியாகி வந்ததும் அதில் சர்க்கரை சேர்த்து கிளறிக்கொள்ளவும்.
இதனைத்தொடர்ந்து இதில் தேங்காய் பாலை சேர்த்து சூடானதும் ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி வடிகட்டிக்கொள்ளவும்.
பின்னர் இதனை ஒரு பாத்திரத்தில் சேர்த்து ஆறியதும் அதன் மேல் நறுக்கிய முந்திரி, பாதாம், பிஸ்தா சேர்த்துக்கொள்ளவும்.
இறுதியாக இதனை பிரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்து எடுத்தால் சுவையான தேங்காய் பால் புட்டிங் தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |