முகத்தை ஜொலிக்க வைக்கும் காபி பொடி ரகசியம்
அனைவருக்குமே காபியின் மணமும், சுவையும் மிகவும் பிடித்த விடயம்.
இதற்கு காரணம் காபியில் இருக்கும் காபீன் எனும் வேதிப்பொருள், இது உடலுக்கு புத்துணர்வு வழங்கக் கூடியதென்பது நாம் அறிந்ததே.
ஆனால் காபி பொடியை வைத்து முகத்தை பளபளவென ஜொலிக்க வைக்க முடியுமாம்.
காபியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, இவை கரும்புள்ளிகளை குறைக்க பெரிதும் உதவுகிறது.
தினமும் காபி பொடியுடன் சிறிதளவு தேன் மற்றும் சீனி சேர்த்து முகத்தில் லேசாக மசாஜ் செய்துவிட்டு, குளிர்ந்த நீரினால், முகம் குழுவினால் முகத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி முகம் உடனடி பொலிவு பெறுவதை அவதானிக்க முடியும்.
காபியில் இருக்கும் ஆண்டிஆக்ஸிடண்ட்கள் புறஊதா கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாக்கின்றது. இது சருமத்தில் உள்ள மெலனின் நிறமியைக் குறைக்க உதவுகிறது.
எனவே முகத்தில் ஏற்படும் கருத்திட்டுக்கள் மற்றும் கரும்புள்ளிகளை குறைக்க உதவுவதோடு முகத்தை இயற்கையாக முறையில் சிவப்பழகாக்க உதவுகின்றது.
நமது மனநிலை எவ்வளவு மோசமாக இருந்தாலும் அதை ஒரு கப் காபி சரிசெய்துவிடும். அதுபோல தான் முகத்தில் எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் காபி தூள் அதை எளிதில் சரிசெய்துவிடும்.
காபி தூளில் இருக்கும் மூலப் பொருட்கள் முகத்திற்கு பல நன்மைகளை வழங்குகின்றன. அதனை தினசரி பயன்படுத்துவதன் மூலம் முகப்பருக்கள் வராமல் தவிர்க்கலாம்.
மேலும் காபி பொடி எவ்வித பாதகமும் இல்லாத இயற்கை பொருள் என்பதனால் பக்க விளைவுகள் குறித்து எந்த பயமும் இல்லாமல் இதனை பயன்படுத்தலாம்.