கருவளையம் நிரந்தரமாக நீங்க உதவும் காபி தூள்.., எப்படி பயன்படுத்துவது?
பெண்களை மிகவும் அழகாக காட்டுவது எப்போதுமே அவர்களது கண்கள் தான்.
ஆனால் சிலருக்கு கண்ணை சுற்றி சிலருக்கு கருவளையங்கள் தோன்றி சோர்வாக இருப்பதுபோல் தோன்றுகிறது.
இதற்கு முக்கிய காரணம், கணினி மற்றும் செல்போனை அதிகளவு பயன்படுத்துவதுதான்.
அந்தவகையில், முகத்தின் அழகினை கெடுக்கும் இந்த கருவளையங்கள் நிறைந்தரமாக நீங்க காபி தூளை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- தண்ணீர்- 1 ஸ்பூன்
- காபி தூள்- ½ ஸ்பூன்
- கற்றாழை ஜெல்- ½ ஸ்பூன்
- ஆமணக்கு எண்ணெய்- 3 சொட்டு
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் காபி தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்துக்கொள்ளவும்.
பின் அதே கிண்ணத்தில் கற்றாழை ஜெல் மற்றும் 3 சொட்டு ஆமணக்கு எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
அடுத்து கருவளையம் உள்ள பகுதியில் இந்த கலவையை பூசி, 30 நிமிடம் விட்டுவிட்டு குளிர்ந்த நீரால் கழுவவும்.
இந்த கலவையை தொடர்ந்து 4 நாட்கள் இரவில் தூங்குவதற்கு முன் பயன்படுத்தி வர கருவளையம் நிரந்தரமாக நீங்கும்.
இதில் உள்ள ஆமணக்கு எண்ணெய் ஈரப்பதத்தை தரும் மற்றும் கண்களுக்கு கீழ் வீக்கத்தை குறைக்கும்.
அதேபோல், காபி தூள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, கருவளையத்தை குறைக்கும்.
மேலும், கற்றாழை ஜெல் சருமத்தை மிருதுவாக்கி, நுண்கோடுகளை குறைக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |