கருவளையம் நிரந்தரமாக நீங்க இந்த ஒரு பொருள் போதும்.., எப்படி பயன்படுத்துவது?
பெண்களை மிகவும் அழகாக காட்டுவது எப்போதுமே அவர்களது கண்கள் தான்.
சில பெண்களுக்கு கண்ணை சுற்றி கருவளையங்கள் தோன்றி சோர்வாக இருப்பதுபோல் தோன்றுகிறது.
அந்தவகையில், முகத்தின் அழகினை கெடுக்கும் கருவளையத்தை நிரந்தரமாக நீக்க காபித்தூளை எப்படி பயன்படுத்த்துவது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- காபி தூள்- ½ ஸ்பூன்
- கற்றாழை ஜெல்- ½ ஸ்பூன்
- ஆமணக்கு எண்ணெய்- 3 சொட்டு
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் காபி தூள் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்துக்கொள்ளவும்.
பின் அதே கிண்ணத்தில் கற்றாழை ஜெல் மற்றும் ஆமணக்கு எண்ணெய் சேர்த்து கலந்துக்கொள்ளவும்.
கருவளையம் உள்ள பகுதியில் இந்த கலவையை பூசி, அரை மணி நேரம் விட்டுவிட்டு குளிர்ந்த நீரால் கண்ணை கழுவவும்.
இந்த கலவையை தொடர்ந்து தூங்குவதற்கு முன் பயன்படுத்தி வர கருவளையம் நிரந்தரமாக நீங்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |