பிரித்தானியாவில் இறுதிச்சடங்கில் நடந்த அசம்பாவிதம்! சடலத்துடன் சவப்பெட்டியை போட்டு தெறித்து ஓடிய குடும்பம்!
'போப் ஆண்டவரே வந்திருந்தாலும் இதை தடுத்து இருக்க முடியாது' எனும் அளவிற்கு, பிரித்தானியாவில் ஒரு இறுதிச்சடங்கில் நடந்த எதிர்பாராத சண்டை காரணமாக, சவப்பெட்டியை கீழே போட்டு மக்கள் தெறித்து ஓடிய சம்பவம் நடந்துள்ளது.
குறித்த சம்பவம் ஸ்காட்லாந்தில் Paisley நகரத்தில் லிண்வூட் பகுதியில் உள்ள கல்லறையில் நடந்துள்ளது.
இந்தக் கல்லறையில் புதன்கிழமை காலை, Ballygaddy சாலையைச் சேர்ந்த 35 வயது Martin Antony Ward என்பவரது சடலம் அடக்கம் செய்யப்பட்டது.
அவரைத் தொடர்ந்து, Gilmartin சாலையில் வசித்த 85 வயதாகவும் Teresa Ward என்பவரை அடக்கம் செய்ய இறுதிச்சடங்குகள் நடந்துகொண்டிருந்தது.
(Image: Irish Mirror WS)
இறுதியாக அடக்கம் செய்ய தெரேசாவின் உடலை, அவரது உறவினர்கள் சவப்பெட்டியில் சுமந்து செல்லும் நேரத்தில், அடையாளம் தெரியாத சில நபர்கள், இறுதிச்சடங்கு ஊர்வலத்தின் உள்ளே புகுந்து, தங்கள் வைத்திருந்த கத்தியால் அனைவரையும் தாக்கியுள்ளனர்.
சவப்பெட்டியை சுமந்து சென்றுகொண்டிருந்த உறவினர்கள் தங்களை தற்காத்துக்கொள்ள, வேறு வழியின்றி சடலத்துடன் சவப்பெட்டியை தரையில் போட்டுவிட்டு அங்கிருந்து தெறித்து ஓடினர்.
சில நிமிடங்களில் அந்த இடத்துக்கு பொலிஸார் வரவழைக்கப்பட்ட நிலையில், தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.
இந்த எதிர்பாராத சம்பவத்தில், 2 பேர்கள் உட்பட 7 பேர் வெட்டு காயங்களுடன் பாதிக்கப்பட்டனர். உடனடியாக அவர்களை அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பொலிஸார் அனுப்பி வையத்தனர். இதில் இருவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு தீவிர சிகிச்சையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Image: Irish Mirror WS)
பிறகு ஒருவழியாக இனத்தவரின் சடலம் அடக்கம் செய்யப்பது. அதனைத் தொடர்ந்து பொலிஸார் நடத்திய விசாரணையில், தாக்குதல் நடத்தியவர்களுக்கும் இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட குடும்பங்களுக்கும் இடையில் எந்த தொடர்பும் இல்லை என தெரியவந்தது.
இதற்கிடையில், இந்த தாக்குதலில் தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின்பேரில் ஒரு இளைஞர் கைது செய்யப்பட்டார். ஆனால், சிறு விசாரணைக்கு பிறகு அவர் விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.